எனது ஊர் காரைநகர்’ ஊடாக இரண்டாவது ஆண்டாக தொடரும் கல்விக்கான உதவி:

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக இரண்டாவது ஆண்டாக தொடரும் கல்விக்கான உதவி:

2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவன் ஒருவரிற்கு கல்வியை தொடர்வதற்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளை வழங்க முடியுமா.. என கல்லூரி சமூகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இம் முகநூலில் அதற்கான உதவி கோரப்பட்டது. ஒரிரு தினங்களிலேயே மாதாந்தம் 10,000 ரூபா வழங்கும் வகையில் அன்பர்கள் தொடர்பு கொண்டார்கள் 2024 ஆகஸ்ட் மாதம் முதல் உதவிகள் வழங்குவதற்கு ஏற்ற வகையில் பழைய மாணவர் சங்க கணக்கிற்கு நிதி அனுப்பி வைக்கப்பட்டது.

1. தீசன் திரவியநாதன் – 12,000 ரூபா

2. ரகுநாதன் சிவபாதசுந்தரம் 75,000 ரூபா(கனடிய அன்பர்)

3. கலாநிதி நல்லநாதன் ஆறுமுகம் 60,000 ரூபா

4. விக்கினேஸ்வரன் இராமச்சந்திரன் 24,000 ரூபா

மொத்தம் ஒரு இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய்கள் அனுப்பப்பட்டது, தொடர்ந்து நிதி உதவி மாதாந்தம் வழங்கப்பட்ட நிலையில் இவ்வுதவியை தொடர்ந்து செயற்படுத்தும் வகையில் கலாநிதி ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் மேலும் 60,000 ரூபாய்களை அனுப்பி வைத்துள்ளார். அதற்குரிய ரசீதினை கல்லூரி சமூகம் உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.

மேற்படி மணவனின் கல்விக்கான உதவியாக கடந்த பல ஆண்டுகளாக காரைநகர் புதுறோட் நியூ ஸ்டார் கல்வி நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்துள்ளதும், O/L பரீட்சையில் மேற்படி மாணவன் 8A, 1C சித்திபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

# குறிப்பு: மற்றும் ஒரு யாழ்ற்றன் கல்லூரியில் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவிக்கு ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூரில் வதியும் அன்பர் ஒருவர் மாதாந்தம் 15,000 ரூபா வழங்கும் வகையில் நான்கு வருடங்களிற்கு வங்கி standing order மூலம் 2025ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு விளம்பரம் அல்ல ஆனால் ‘எனது ஊர் காரைநகர்’ மட்டும் தனித்து செயற்படுத்தும் சேவைகளை விளம்பரப்படுத்துவது இல்லை ஆனால் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தவிர்ந்து வேறு அன்பர்கள் இணைந்து செயற்படுத்தும் சேவைகளிற்காக இன்னொருவரிடம் 5 ரூபா பெற்றிருந்தாலும் நம்பிக்கை தன்மை மற்றும் வேறு எவரிடமும் இதற்கான உதவிகளை பெறவில்லை என்பதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் இந்த தகவல் அனைவருற்காகவும் பகிரப்படுகிறது.

‘எனது ஊர் காரைநகர்’ மூலமாக செய்யப்பட்ட, செய்யப்படும் எந்த திட்டங்களானாலும் நிதி உதவிகள் தீசன் திரவியநாதனால் பெறப்படுவதில்லை நேரடியாக திட்டத்தை செயற்படுத்தும் அமைப்புக்களிற்கே பணத்தை அனுப்பி பணம் அனுப்பியவர் பெயரிலேயே ரசீதும் பெற்றுக்கொடுப்பதும் திட்ட செயற்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்வதும் மட்டுமே எனது கடமை.

அடுத்தவர் பணத்தில் ‘எனது ஊர் காரைநகர்’ தன் பெயரை பதித்துக்கொள்வதில்லை.

பரம்பொருளான பரமேஸ்வரனே வந்தாலும் ‘எனது ஊர் காரைநகர்’ கடந்த 20 ஆண்டுகளில் எந்தெந்த திட்டங்களிற்காக எந்தெந்த நபர்கள் எவ்வளவு நிதியுதவி வழங்கினார்கள் என்பது அந்தந்த வருட ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்படுவதோடு, கடந்த 20 வருடத்தில் எனது ஊர் காரைநகர் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஐந்து கோடி ரூபாய்களிற்கு மேற்பட்ட திடங்களின் வரவும், செலவும், கணக்கும் எந்த நிமிடத்திலும் வழங்குவதற்கும் ஏற்ற வகையில் பதிவு செய்யப்பட்டும் உள்ளதை கண்டு ஆச்சரியம் அடைவான்.

அண்மையில் நடைபெற்ற மருதடி பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகமும் அதற்கான திருப்பணிகளிற்கும் “எனது ஊர் காரைநகர்” ஊடாக 30 இலட்சம் ரூபாய்களிற்கு மேற்பட்டளவில் அடியவர்கள் வழங்கியிருந்தார்கள், நிதி பொறுப்புரிமையாளர் சபை கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களிற்குரிய ரசீதினை அவர்கள் பெயரிலேயே பெற்றும் கொடுக்கப்பட்டது.

சொல்ல வேண்டிய விடயத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வதும், செய்ய வேண்டிய விடயத்தை செய்ய வேண்டிய தருணத்தில் செய்வதிலும் ‘எனது ஊர் காரைநகர்’ பின்னிற்பதில்லை.

போலிகள் சில உலா வருவதால் உண்மைக்கும் சில சமயம் விளம்பரம் தேவைப்படுகிறது என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

“தான் கள்ளன் பிறரை நம்பான்’ என்பது பழமொழி ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது.

முழுமையாக வாசித்திருக்கும் உங்களிற்கு நன்றி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

கொழும்பு -புறக்கோட்டை – மத்திய பேரூந்து நிலைய திறப்பு விழா

காரைநகர வியாவில் ஐயனார் கோயில், இராஜகோபுர கும்பாபிஷேகம் 29.04.2026

Leave a Reply