காரைநகர் அபிவிருத்தி சபை நாட்காட்டி வெளியீடும் உதவித்தொகை வழங்கலும்..! | 31.12.2021
31.12.2021 இன்று வெள்ளிக்கிழமை மாலை காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது. காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளிற்கு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், காரை மண்ணின் மருமகனுமான திரு.சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராசா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாட்காட்டியை வெளியிட்டு வைத்ததுடன் ‘நவீன உலகில் நூலகத்தின் பயன்பாடு” என்னும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.









காரைநகர் அபிவிருத்தி சபையினரால் வெளியிடப்பட்ட 2022ம் ஆண்டுக்கான நாட்காட்டிக்கான முழுமையான அனுசரணையும் விழாவிற்கான அனுசரணையும் (75,000Rs) ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக தீசன் திரவியநாதனினால் வழங்கப்பட்டது.









இன்று நடைபெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வில் காரைநகரில் இயங்கும் 14 முன்பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் 32 ஆசிரியர்களிற்கும் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் புதிய ஆண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட கொடுப்பனவாக 3,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.









காரைநகர் அபிவிருத்தி சபையினரால் இனம்காணப்பட்ட காரைநகரில் வதியும் பாடசாலைக்கு செல்லும் 3 பிள்ளைகளை உடைய கல்லந்தாழ்வை சேர்ந்த, வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ள குடும்ப தலைவரைக்கொண்ட குடும்பத்தினரின் அத்தியாவசிய தேவையறிந்து துவிச்சக்கரவண்டி ஒன்றும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இதற்கான அனுசரணையினை ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக கனடாவில் இருந்து 5 நண்பர்கள் வழங்கியிருந்தார்கள்.









அவர்கள் விபரம் வருமாறு:
1. கனகேந்திரம் உமைபாகன் – 50$- 9,500 ரூபா
2. நவரத்தினம் முரளிதரன் – 50$ – 9,500 ரூபா
3. விஸ்வலிங்கம் பரந்தாமன் – 50$ – 9,500 ரூபா
4. தர்மலிங்கம் சிவா – 50$ – 9,500 ரூபா
5. திரவியநாதன் தீசன் – 50$ – 9, 500 ரூபா















Leave a Reply
You must be logged in to post a comment.