காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாகத்தை கண்டித்து ‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com கண்டனத்தை தெரியப்படுத்துகிறது.
28.04.2024 அன்றுடன் நிறைவு பெற்ற கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டு காரைநகரில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களிற்கான மாதாந்த உதவிகள் மற்றும் பாடசாலைகள் செல்லும் மாணவர்களிற்கென மாதாந்த உதவிகள் வழங்குவதற்கென நிதி ஒதுக்கப்பட்டதுடன் அதற்குரிய நிதி வழங்கும் வழிவகைகளும் செய்து வைக்கப்பட்டன.
கனடா காரை கலாசார மன்றத்தின் 2016ம் ஆண்டு திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையினால் விட்டுச்செல்லப்பட்ட 24,500 டொலர்கள்(30 இலட்சம் ரூபாய்கள்), மற்றும் 2016~2018 வரையான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையான நிர்வாகத்தினரால் ஊரிற்கென சேர்க்கப்பட்ட நிதி என மொத்தம் 65 இலட்சம் ரூபாய்கள் ஹட்டன் நாஷனல் வங்கி கொழும்பு கிளையில் நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளது.
அதன் மாதந்த வட்டிப்பணம் காரைநகர் அபிவிருத்தி சபையின் நடைமுறை கணக்கிற்கு நேரடியாக வங்கியினால் வைப்பு செய்யும் வகையில் ஆவண செய்யப்பட்டதுடன், 28.04.2024 அன்று மேலதிகமாக 4 இலட்சம் ரூபாய்கள் மாணவர்களின் கல்விக்கான மாதாந்த கொடுப்பனவுகளிற்கெனவும் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படதன் பின்னரே திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாக சபை முட்டாள் ஒருவரிடம் நிர்வாகத்தை கையளிக்க வேண்டிய காரணத்தினால் கையளித்துச் சென்றது.
ஆனாலும் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த 35 வருட பயணத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக காரைநகர் அபிவிருத்தி சபை பல்வேறு நிர்வாக சிக்கல்களிற்கு மத்தியில் செயற்பட்டு வந்த போதிலும் கனடா காரை கலாசார மன்றத்தினூடாக இனங்காணப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரப்பட்ட கல்விச்செயற்பாடுகளில் எந்தவிதமான இடையூறுகளும் வரதவண்ணம் கடந்த நிர்வாக சபை தலைவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.


ஆனால் தற்போது காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக சபையானது திரு.விஸ்வலிங்கம் ஹம்சன், செயலாளர் திரு.பொ.பரந்தாமன், பொருளாளர் திரு.பரம்தில்லைராசா (சின்னத்தம்பி) ஆகியோர் காரைநகர் அபிவிருத்தி சபையினதும், கனடா காரை கலாசார மன்றத்தினதும் கடந்த கால உறவுகளையும் இறையாண்மையையும் கருத்தில் கொள்ளாது தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை கருத்தில் கொண்டு கடந்த மூன்று மாதங்களிற்கு மேலாக பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்களிற்கான மாதாந்த கொடுப்பனவுகளை தமது சொந்த விதண்டாவாதங்களையும் நிர்வாக செயலற்ற தன்மைகளையும் பறைசாற்றும் முகமாக அனைத்தையும் இடைநிறுத்தி வைத்துள்ளார்கள்.
மாமாந்தம் 10,000 ரூபா, 7,500 ரூபா, 2,000 ரூபா வென மொத்தம் 15 மாணவ மாணவிகள் மாதாந்த கல்விச் செயற்பாட்டிற்காக கனடா காரை கலாசார மன்றத்தினூடாக வழங்கப்பட்ட வந்த மாதாந்த உதவிகளை பெற்று வந்தனர். இவர்களது குடும்ப சூழ்நிலை, கல்வி கற்றலுக்கான பணத்திற்கான தேவையறிந்து வழங்கப்பட்ட உதவிகளை இடைநிறுத்தியிருப்பதும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாதளவிலும் கடந்த மூன்று மாதங்களிற்கு மேலாக இருப்பதுவும் கண்டிக்கத்தக்கது.

காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக தலைவர் திரு.விஸ்வலிங்கம் ஹம்சன் தனது மிகப்பெரும் தலைமைப்பதவியில் இருந்தாலும் தொடர்புகளை தவிர்த்துக்கொண்டு மற்றைய சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஷியாக உள்ளார், செயலாளர் பரந்தாமன் வனவாசத்தில் உள்ளார், பொருளாளர் திரு.சின்னத்தம்பி அவர்கள் நாட்டாமை வேலைகளிலும் தனது பணி என்னவென்றே தெரியாத வகையில் காரை மக்களை தரங்குறைந்தளவில் நடாத்திக்கொண்டிருக்கிறார்.
பல்கலைக்கழகம் செல்லும் மாணவ மாணவிகளிற்கு அவர்களின் குடும்ப சூழ்நிலை அறிந்து கனடா காரை கலாசார மன்றம் கொடுக்க முன்வந்த 10,000 ரூபா மாதாந்தம் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களிற்கு தெரியுமா.. பொதுப்பணிக்கு வந்த பன்னாடைகளா..!
உங்கள் பகட்டுற்கு இலட்சங்களில் விழா நடாத்துவதற்கு இரண்டு இலட்சத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் பத்து தடவை போன் பண்ண தெரிந்த உங்களிற்கு 15 மாணவர்களின் கல்வித்தேவைக்காக கனடா காரை கலாசார மன்றம் ஒதுக்கிய பணத்தை உரிய நேரத்திலும் உரியவரிடமும் கொடுக்க வேண்டிய அவசியம் உங்களிற்கு தெரியவில்லையா.. அடுத்த மாதம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் முற்கூட்டியே அதற்குரிய நடவடிக்கை எடுக்கவும் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த கால நல்லெண்ணங்களை கருத்தில் கொண்டு தண்ணி வித்த காசை கூட முற்பணமாக கொடுத்து வரவை பாக்கியில் வைப்பீர்கள் என்ற தகுதி உங்களிடம் இருந்தும் கடந்த மூன்று மாதமாக உங்களால் மாணவர்களிற்கான நிதி வழங்கப்படவில்லை என்பதும் அதனை இன்று பயனாளி மாணவி ஒருவர் உங்களில் ஒருவருடனும் இதுவரை கதைக்க முடியாத சூழ்நிலையில் கனடாவிற்கு பலவித சிரமங்களிற்கு மத்தியில் சரியோ, தவறோ என்று கூட தெரியாத நிலையில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தொடர்பு கொண்டுள்ளது.
மனிதாபிபானம், நேர்மை, திறமை, ஊர்ப்பற்று, சந்தர்ப்பம் என்னவென்று தெரியாத நிலமையிலா நீங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பதவிகளை பெற்றுக்கொண்டீர்கள். இவை எதுவுமற்ற நீங்கள் நிற்க வேண்டிய இடம் ஊர்காவற்றுறை கோர்ட் என்பதில் எனக்கும் எதுவித சந்தேகங்களும் இனி இல்லை.
மக்களிற்கான பணியை நீங்கள் செய்தீர்களானால் மக்கள் உங்கள் பக்கம் எப்போதும் எந்த சூழ்திலையிலும் நிற்பார்கள். நீங்கள் உங்கள் ஈகோவையும் உங்களிற்கானவர்களை திருப்திப்படுத்தவும், உங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்கவுமே உங்கள் பதவிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது நிரூபணமாகிறது.
பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிற்கான கல்விக்கான கடந்த கால மாதாந்த உதவிகளை உடனடியாக பயனாளிகளிடம் வழங்கவும் காரைநகர் அபிவிருத்தி சபையில் தங்களது தற்காலிக நிர்வாக சபையில் பதவி வகிக்கும் நீங்கள் உங்கள் பணிகளை உரிய முறையில் பணியாற்றவும் அல்லது உடனடியாக காரைநகர் பிரதேச செயலகத்தில் உங்கள் இராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு செல்லவும் கேட்டுக்கொள்கிறேன்.
காரைநகர் பிரதேச செயலர் ஊடாக மேற்கொண்டு ஆவணவற்றை செய்ய தகுதியும் திறமையும் நேரமும் எனக்கு உண்டு என்பதையும் கனடாவில் இருந்து காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக கனடா காரை கலாசார மன்றத்தின் உதவிகளும் கனடா வாழ் காரை மக்களின் உதவிகளும் காரை உறவுகளிற்கு உரிய நேரத்தில் கிடைப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் அளவிற்கு எனது ஊரையும் மண்ணையும் மக்களையும் நிர்வாகங்களையும் நான் நன்கு அறிவேன் என்பதையும் திடமாக நம்புகிறேன்.
காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாக சபை உறுப்பினர்களே… உடனடியாக பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கப்பட வேண்டிய கடந்த கால நிதி உதவிகளை திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையாலான நிர்வாகத்தால் கண்டுகொள்ளப்பட்டு அதற்கென ஒதுக்கப்பட நிதியுதவிகள் மூலம் நிறைவேற்றவும் தொடர்ந்தும் கனடா காரை கலாசார மன்றத்தின் நல்லுறவை இறையாண்மையுடன் ஊர் நன்மை கருதி பேணவும் கேட்டுக்கொள்கிறேன். இலாயக்கற்றவர்களுடன் சேர்ந்து உங்கள் திறமைகளையும் உங்கள் ஊர்ப்பற்றையும் விழலுக்கு இறைத்த நீராக விரயமாக்காதீர்கள்.
விளங்கிக்கொண்டால் நன்றி.
– எனது ஊர் காரைநகர் –
தீசன் திரவியநாதன்.



