20.07.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய தற்காலிக நிர்வாக சபையின் செயற்பாடுகள் மற்றும் முழுமையாக இயங்க முடியாத சிரமங்களை கண்டறிந்து சுமூகமான முடிவுகளை ஏற்படுத்தவுள்ள கலந்துரையாடல் இலங்கை நேரம் ஞாயிறு மாலை 7.00 மணிக்கு சமூக வலைத்தளம் ஊடாக நடைபெறும்.
20.07.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணி.
உலகளாவிய காரை மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் காரை மண்ணின் வளர்ச்சி கருதிய அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். ஆனால் முன்கூட்டிய உங்கள் பதிவுகளை மேற்கொள்ள உங்களது WhatsApp தொடர்பு இலக்கத்தினை 1 416 821 8390 என்ற whatsApp இலக்கத்தில் அறியத்தருவது முக்கியமானது.
கனடா நேரம் சனிக்கிழமை இரவு 9.30 மணி
குறைந்த பட்சம் கலந்துரையாடலுக்கு இலங்கை நேரம் ஞாயிறு மாலை 6.30க்கு முன்னர் தங்கள் இலக்கத்தினை பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே இக்கலந்துரையாடலில் பங்கு பற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தனிப்பட்ட வகையில் கடந்த காலங்களில் எனது WhatsApp தொடர்பில் இருந்து விலக்கழிக்கப்பட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்ற விரும்பினால் theesan@karainees.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அறியத்தருவதன் ஊடாக எனது WhatsApp ஊடான மறுப்பு நீக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.
இக்கலந்துரையாடலில் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக காரை மண்ணின் வளர்சியை எதிர்பார்க்கும் எவருக்கும் தடையில்லை. காரை மண்ணின் வளர்சிக்கு காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக மட்டுமே வெளிநாட்டு காரை மக்களால் அதிகூடிய நற்பயனை வளங்க முடியும்.
காரைநகர் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடுகளில் வதியும் காரை உறவுகளின் ஊடாக உதவிகளை பெற்று உள்ளூரில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் அனைத்து அமைப்புக்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வதும் அறிந்து கொள்வதும் முக்கியமானதாகும்.
நன்றே செய்வோம், அதை இன்றே செய்வோம்.
நன்றி.



