காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…!
காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…!
அமரர் ஜெ.தில்லையம்பலவாணர் அவர்களால் மீள ஆரம்பிக்கப்பட்டு சிறப்புற இயங்கி வந்த காலப்பகுதியில் அன்னாரது திடீர் மறைவிற்கு பின்னர் ஸ்தம்பித நிலமையை அடைந்தது. ஆனால் அதன் பின்னர் காரைநகர் பிரதேச செயலகம் தலையிட்டு அப்போதைய செயலர் திரு.R.T.ஜெயசீலன் அவர்களது வழிநடாத்தலில் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு திரு.மகாராணி சோமசேகரம்பிள்ளை அவர்கள் தலைமையில் புத்துணர்ச்சி பெற்றது. 2010.09.19 அன்று அன்றைய பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு இயங்க முடியாத நிலையில் இருந்த காரைநகர் அபிவிருத்தி சபை புத்துயிர் பெற்றது.
இன்று 15 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதே போன்றதொரு சூழ்நிலையில், அதே பிரதேச செயலகத்தின் தலையீட்டுடன் அதே செப்டெம்பர் மாதம் இதோ நாளை பொதுக்கூட்டம் கூடுகின்றது. வரலாறு மீண்டும் தொடர்கிறது.


Leave a Reply
You must be logged in to post a comment.