காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.!
28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையினர் பிரதேச செயலரின் வேண்டுகோள்களை முறைப்படியாக நிறைவேற்றி பொதுக்கூட்டத்திற்கான திகதியை அறியப்படுத்தியுள்ளார்கள். அதன்பிரகாரம் யாப்புதிருத்த அங்கீகாரம் பெறப்பட்டு அதே தினம் புதிய யாப்பின் பிரகாரம் புதிய நிரந்தர இரண்டு ஆண்டுகாலம் ஆயுட்காலம் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்படவுள்ளது.
ஆயுட்கால அங்கத்தவர்கள் மற்றும் 2024ம் ஆண்டுக்கான (கவனிக்க…2025 நடப்பு ஆண்டு அல்ல) அங்கத்துவ பணம் செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
மேலதிக தொடர்புகளிற்கு யாழில் வெளியாகும் செய்தி நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட பொதுக்கூட்ட விளம்பர அறிவித்தலில் உள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
நாளிதளில் வெளியான பொதுக்கூட்ட அறிவித்தல் வருமாறு.


Leave a Reply
You must be logged in to post a comment.