காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.!

28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையினர் பிரதேச செயலரின் வேண்டுகோள்களை முறைப்படியாக நிறைவேற்றி பொதுக்கூட்டத்திற்கான திகதியை அறியப்படுத்தியுள்ளார்கள். அதன்பிரகாரம் யாப்புதிருத்த அங்கீகாரம் பெறப்பட்டு அதே தினம் புதிய யாப்பின் பிரகாரம் புதிய நிரந்தர இரண்டு ஆண்டுகாலம் ஆயுட்காலம் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்படவுள்ளது.

ஆயுட்கால அங்கத்தவர்கள் மற்றும் 2024ம் ஆண்டுக்கான (கவனிக்க…2025 நடப்பு ஆண்டு அல்ல) அங்கத்துவ பணம் செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

மேலதிக தொடர்புகளிற்கு யாழில் வெளியாகும் செய்தி நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட பொதுக்கூட்ட விளம்பர அறிவித்தலில் உள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

நாளிதளில் வெளியான பொதுக்கூட்ட அறிவித்தல் வருமாறு.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள் மனதில் பெரும் நம்பிக்கை ஒளி வீசிவருகிறது.

காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு. பரம்தில்லைராஜா ஆகியோரின் வழிநடாத்தலில் நிர்வாக சபை செய்தவை என்ன…செய்ய மறந்தவை என்ன..? கொஞ்சம் அறிந்து கொள்வோமா..!

Leave a Reply