நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
AGM

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் திரு. குருபரன் K.K.சுப்பிரமணியம் தலைமையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் திரு. குருபரன் K.K.சுப்பிரமணியம் தலைமையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

28.09.2025 அன்று நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டத்தின் போது தெரிவு செய்யப்பட்டு, காரைநகர் பிரதேச செயலரின் உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து 22.10.2025 புதன்கிழமை அன்று காரைநகர் பிரதேச செயலர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, சபையின் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தற்காலிக நிர்வாக அமைப்பைக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவில் இயங்கி வந்த காரைநகர் அபிவிருத்தி சபை முழுமையானதும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளிற்கு நிரந்தரமாகவும் காரை மண்ணிற்கும் மக்களிற்கும் பணியாற்ற 15 நிர்வாக சபை உறுப்பினர்களைக்கொண்ட நிர்வாக சபை சுதந்திரமாக செயற்படவும் முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபையின் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையினை காரைநகர் பிரதேச செயலகம் ஏன் அங்கீகரித்து அனுமதி வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை ஏன் வந்தது..? என்று அறிய ஆவலாக இருக்கலாம்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளில் நிர்வாக சபை உறுப்பினர்களில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளிற்கு அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் பாரிய குற்றப்பின்னணிகளை கொண்டிருக்க கூடாது என்பதும், நிதி மோசடி மற்றும் பாரிய கிரிமினல் குற்றப்பின்னணிகளை கொண்டிருக்கக்கூடாது என்பதும் சமூகத்தின் அமைதி வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு சிறைத்தண்டனை பெற்றவராகவும் இருக்க கூடாது என்பது அரச சுற்றுநிரூபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் காவல்துறையின் சான்றிதழ் பெற்று வழங்கப்படவேண்டும் என்பதும் அதனை உறுதி செய்தும், குற்றப்பின்னணி இருந்தால் இப்பதவிக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அங்கீகரிப்பதும் நிராகரிப்பதும் பிரதேச செயலரின் கடமைக்கு உட்பட்டது என்பதால் பிரதேச செயலரின் அனுமதியை பெறவேண்டியது நடைமுறையாக்கப்பட்டுள்ளது என்பது அறிந்து கொள்ளப்படவேண்டியது.

அது மட்டுமன்றி பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் யாப்பு விதிகளிற்கு அமைய பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும் பிரதேச செயலரின் ஆளுகைக்கு உட்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர்(SSO) பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உறுதிப்படுத்துவதும் அவருடைய அறிக்கையினைப்பெற்றுக்கொள்வதும் பிரதேச செயலரின் பணிகளில் ஒன்றாகும். அதன் காரணமாகவே 28.09.2025 நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட் திரு.குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபை தமது நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்க 22.10.2025 வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும், மக்களிற்கு உண்மையானதும் நேர்மையானதும் ஆன உறுதிப்படுத்தப்பட் தகவல்களை வழங்க ‘எனது ஊர் காரைநகர்’ நேரகால தாமதத்தை எடுத்துக்கொண்டது.

22.10.2025 நேற்றையதினம் புதன்கிழமை காரைநகர் பிரதேச செயலகத்திற்கு அழைக்கப்பட்ட தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம், செயலாளர் திரு.பொ.பரந்தாமன், பொருளாளர் திரு.வே.செல்வராசா ஆகியோர் பிரதேச செயலரிடம் தமது கையொப்பங்களை பதிவு செய்ததுடன் உத்தியோக பூர்வமாக வங்கிக்கணக்குகளை நடைமுறைப்படுத்த வங்கிகளிற்கு புதிய நிர்வாக சபையின் கையொப்ப விபரங்களும் பிரதேச செயலரினால் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

28.09.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்ட 15 நிர்வாக சபை அங்கத்தவர்கள் கொண்ட முழுமையான நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகம் காரைநகர் மண்ணிற்கும் மக்களிற்கும் எல்லாவகையிலும் சிறப்புற பணியாற்ற ‘எனது ஊர் காரைநகர்’ சார்பாகவும் கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பாகவும் வாழ்த்தி வரவேற்றுக்கொள்கிறது

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605