காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 31.012.2025 அன்று நடைபெற்றது.
காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 31.012.2025 அன்று நடைபெற்றது. அதன்போது பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சொந்த விருப்பு வெறுப்புகளிற்கு உட்பட்டு சில ஊடகங்கள் அது தொடர்பான விசமத்தனமான பிரச்சாரங்களில் மட்டும் ஈடுபட்டு வருகின்ற போதிலும், காரைநகர் பிரதேச சபை உறுப்பினராக களபூமி பிரதேசத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தொகுதியில் வெற்றிபெற்ற திருமதி கிளியோபெற்ரா மகேஸ்வரன் அவர்கள் மக்களிற்கான , பிரதேசத்திற்கான வளர்ச்சியை முன்னிறுத்தி அரசியல் ஊடாக சிறப்பான பணிகளை ஆற்றிவருகிறார். அரசியலில் பெண்களின் பங்களிப்பு மட்டுமன்றி துடிப்புடனும் துணிவுடனும் செயற்படுவதுடன் காரைநகர் மண்ணின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.

Leave a Reply
You must be logged in to post a comment.