“காரைநகர் பிரதேச சபை அரசியல் இவ்வளவு தான்”
எதுவும் சிதம்பர ரகசியம் அல்ல, ஆனால் உண்மையை சொல்ல எவரும் முன்வரவில்லை. நான் அறிந்த அரசியல் காரைநகரில் இதுதான். வாசித்து பாருங்கள்… உண்மை தானா என்று பாருங்கள்..
அரசியல் என்பது மக்கள் வாக்கிற்கு ஏற்ப அமைய வேண்டுமானால் அது யதார்த்தத்தில் சாத்தியப்பட வேண்டும். அவ்வாறு மக்கள் விருப்பத்திற்கு அமைய வேண்டுமானால் வேட்பாளர்கள் மக்கள் தொண்டாளர்களாக இருக்க வேண்டும். கட்சிகள் மக்களிற்கானதாக இருக்க வேண்டும்.
முகநூல் ஊடாக “எனது ஊர் காரைநகர்” சொல்வதால் மாற்றங்கள் இடம்பெறாது என நினைத்து விடாதீர்கள். அரசியலிற்குள் ‘அரசியல்’ செய்வது எனது நோக்கம் அல்ல. உண்மையை தெளிவாக சொல்வதற்கும்
காரைநகரில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மூலமும் கட்சிகளின் நிலவரமும் அடிப்படையில் பாமர மக்களில் ஒருவனாக தெரிந்து கொண்டளவில் சாத்தியமானது என்னவென்று ஒரு சாஸ்திரம்(ஊகம்) உண்மை கலந்து…
காரைநகரில் சின்னங்கள் பெற்ற மொத்த வாக்குகள் இதுதான்.(இதில் எந்த doubt உம் இல்லை தானே)
1. மாட்டுவண்டில் 1350 votes(சுயேற்சை குழு) 2 seats
2. திசைகாட்டி 1044 votes, 2 seats
3. மான் 909 votes, 2 seats
4. சைக்கிள் 833 votes, 2 seats
5. யானை 604 votes, 2 seats
6. வீடு 442 votes, 1 seat.
காரைநகரில் மொத்தம் 11 seats.
அப்படியாயின் காரைநகரில் அதிகூடிய வாக்குகளை பெற்றவர்கள் தானே ஆட்சியமைக்க வேண்டும். ஆனால் ஆட்சி அமைக்க 6 ஆசனங்கள் தேவை. சரி அது அப்படி ஆயின் கூடுதல் வாக்குகளை பெற்ற முதல் மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும். (மக்களின் வாக்குகளிற்கு ஏற்ப ஆட்சி அமைப்பதாக இருந்தால்).
இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற திசைகாட்டி மத்தியில் ஆளும் கட்சியாக விளங்குவதால் மற்றைய கட்சிகளிற்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சி அமைக்காதென ஜனாதிபதி அவர்களே தெரிவித்து வருவதுடன், ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தலில் களமிறங்கியவர்கள் ஆளுங்கட்சியுடன் இணைந்து பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதும் அரசியல் நாகரீகம் இல்லை. அப்பட்டமாகவே பதவிக்காக என்பது வெளிப்படையாகும். எனவே இரண்டாவது அதிகூடிய வாக்குகளான 1044 வாக்குகளை பெற்ற திசைகாட்டி காரைநகர் பிரதேச சபையில் வெளியே தான்.(மான், சைக்கிள் சான்சே இல்லை, யானை காரைநகரிற்குள் ok ஆனால் அநுர/ ரணில் தேசிய பிரச்சனை)
அடுத்து முதலாவதாக 1350 வாக்குகளை மாட்டுவண்டில் சின்னத்தில் சுயேற்சைகளாக போட்டியிட்டவர்களும், மூன்றாவதாக மான் சின்னத்தில் 909 அதிகூடிய வாக்குகளை பெற்றவர்களும், நான்காவதாக சைக்கிள் சின்னத்தில் 833 வாக்குகளை பெற்றவர்களும் இணைந்து மொத்தம் 6 ஆசனங்களுடன் காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தானே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.(தொடர்ந்து வாசித்தால் தான் மீதி விளங்கும்..)
சைக்கிள் சின்னத்தில் இருந்து தனியாக பிரிந்து வந்து கட்சி அமைத்தாலும் சைக்கிளுக்கும் மானுக்கும் கொள்கைகள் ரீதியாக வேறுபாடுகள் அதிகம் இல்லை. எனவே இணைவதில் சிக்கல்கள் இருந்தால் அது மக்கள் நலன் கருதாது தனிப்பட்ட பிரச்சனைகளே. ஆனால் இந்த மானும், சைக்கிளும் மாட்டுவண்டியுடன் இணைவதில் என்ன சிக்கல்..? இதற்கான பதில் காரைநகர் மக்களிற்கு வெளிப்படையாக தெரிந்தாலும் சொல்லப்படும் காரணங்கள் வேறு வேறு.
அது சரி மாட்டுவண்டில், மான், சைக்கிள் இந்த மூன்றும் இணைந்தால் 6 seats வரும், அப்படி வந்தால் ஆட்சி அமைக்க முடியுமா என்றால் அதுவும் சாத்தியமாகவேண்டினால் திசைகாட்டியையோ அல்லது யானையையோ நடுநிலமைக்கு அழைத்துத்தான் ஆகவேண்டும். காரணம் இலங்கையில் தேர்தல் ஆணையகத்தின் விதிகளிற்கு அமைய ஆட்சியமைக்க கோரும் கூட்டத்திற்கு கோரம் சேர்ப்பதற்காக, வெற்றி பெற்ற 11 வேட்பாளர்களில் 8 வேட்பாளர்கள் முதலாவது கூட்டத்திற்கு சமூகமளிக்க வேண்டும். இதில் திசைகாட்டியை சேர்ந்த இருவரோ அல்லது யானையை சேர்ந்த இருவரோ அல்லது இரு கட்சிகளில் இருந்த ஒரோ ஒருவருடன் வீடு சின்னத்தில் தெரிவானவர் சமூகமளிக்க வேண்டும்.
மக்களின் வாக்குகள் மீது நம்பிக்கை இல்லாமலும், கட்சிக்காக வக்காலத்து வாங்குபவர்களாலும் இவை எதுவும் சாத்தியமாகாது என்பதுடன். நான்காவது இடத்தில் 604 வாக்குகளைப்பெற்று யானை சின்னத்தில் வென்றவர்களும், ஐந்தாவது இடத்தில் 442 வாக்குகளை பெற்று ஒரே ஒரு ஆசனத்தை பெற்றுள்ள வீடு சின்னமும் தாங்கள் தான் ஆட்சி அமைக்க வேண்டும் எனவும் முயற்சிக்கிறார்கள்.
சிங்கள கட்சிகளிற்கு வாக்கு போடதீர்கள் என தேர்தல் வாக்குறுதிகளை வளங்கிய மான், சைக்கிள் இரண்டும் யானைக்கு ஆதரவு வளங்குமா…? அல்லது… மான் அல்லது சைக்கிள் உடன் சுயேட்சை குழுவுடன் இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளதா..!
மாட்டுவண்டில் சின்னத்தில் போட்டியிட்டு முதலாவது இடத்தில் அதிகூடியளவில் 1350 வாக்குகளை பெற்ற மாட்டுவண்டில் எந்த கட்சியுடன் இணைந்தும் ஆட்சியமைக்க தயாராக உள்ள போதிலும் பிரதேச சபையில் தலைமை பதவியான ‘தவிசாளர்’ பதவி தமக்கே வளங்க வேண்டும் என கேட்பதை நியாயமாக கொண்டிருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு பிரதேச சபையில் ஆட்சியமைக்க “சாதி வெறி” இடங்கொடுக்கவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.
இவற்றிற்கெல்லாம் இடையில் ஐந்தாவது இடத்தில் 442 வாக்குகளை பெற்று ஒரே ஒரு ஆசனத்தை கொண்டிருக்கும் “வீடு” சின்னத்தில் போட்டியிட்டவர்களும் காலத்தின் கோலத்தால் காரைநகரில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் தாமும் அரசியல் மாஜாயாலம் செய்து ஆட்சி அமைக்கவும் அல்லது முதல் இரண்டு கூட்டங்களிற்கும் கோரம் இல்லாது செய்து காரைநகரில் பிரதேச சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் ஆட்சியமைக்க முடியாதளவில், காரைநகர் பிரதேச சபையினை அரசின் செயலாளரின் தனிப்பட பணிகளிற்காக ஒப்படைக்கவும் தயாராக உள்ளனர்.
தேர்தல் மூலம் மக்கள் வளங்கிய தீர்ப்பை ஏற்று மக்களிற்காக பணி செய்ய மக்களது வாக்குகளின் அடிப்படையிலேயே ஆட்சியும் அமைய வேண்டும் என்பதையும், ஜனநாயக நாட்டில் இன,மத,மொழி,சாதி, சமயங்களிற்கு அப்பாற்பட்டும், கட்சிகளிற்காக உயிர் கொடுக்கும் தொண்டர்களாக அல்லாது மக்களிற்காக பணி செய்யவே தேர்தல் களத்திற்கு வந்தார்கள் என்பதை காரைநகர் 11 வேட்பாளர்களும் நிரூபிக்க வேண்டும். காரைநகர் பிரதேச சபையில் மக்களாட்சியை நிலைநிறுத்த வேண்டும்.
கட்சிகளின் சார்பிலும், சுயேட்சைகளாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 வேட்பாளர்களும் தங்களது கட்சிகளின் கொள்கைகள், தமது சொந்த நலன்கள் என்பவற்றிற்கும் மேலாக மக்கள் பணியே தமது சேவை என கருதி தேர்தலில் போட்டியிட்டிருந்தால் பிரதேச சபை ஆட்சி அமைப்புக்கான முதலாவது கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்க வேண்டும்.
மக்களது வாக்குகளை பெற்றும், மக்களிற்காக வாக்குறுதிகளை வளங்கியும், ஜனநாயகத்தை நம்பி தேர்தலில் போட்டியிட்டு வென்றதும் உண்மையானால் அரசியலுக்குள் ‘ அரசியல்’ செய்யாது முதலாவது மற்றும் தேவையேற்படின் இரண்டாவது கூட்டத்திற்கும் சமூகம் அளிப்பீர்கள்.
அல்லது கட்சிகளிற்காகவும், பதவிகளிற்காகவும் தான் போட்டியிட்டு காரைநகர் மக்களை மடையர்களாக்கி உங்களிற்கான வாக்குகளை பெற்றுள்ளீர்கள் என்பதும், இனி வரும் காலங்களில் தேர்தல் அரசியலில் நீங்கள் இறங்கினால் மக்கள் உங்களிற்கு செருப்படி வளங்கவும் நீங்கள் அனுமதி வளங்குகிறீர்கள் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவீர்கள்.
மக்களிற்காக நீங்கள் எதையாவது செய்ய எண்ணியதால் தான் தேர்தலில் போட்டியிட்டீர்கள் என்றால் புறக்கணிப்பால் நீங்கள் எதனையும் சாதித்துவிட முடியாது. அரசியல் என்பதும் ஒரு Game, அதை விளையாடித்தான் வெல்லவேணும். வெற்றி மூலம் கிடைக்கும் கனி மக்களிற்கானது. மக்களிற்கு கனி வளங்க போகிறீர்களா அல்லது உங்களது கட்சிகளை திருப்திப்படுத்த நீங்கள் பெற்ற வெற்றிகளை விரயம் செய்ய போகிறீர்களா என்பதை நீங்கள் தான் தீர்மானிப்பீர்கள்.
நீங்கள் முதலாவது ஆட்சியமைக்க கோரும் கூட்டத்தில் கலந்து கொள்வதால் மட்டுமே உங்கள் ஊர் மக்களிற்கு உண்மையானவராக இருப்பீர்கள். கட்சிகளை கடந்தும் பிரதேச சபையில் நீங்கள் சுயமாக எவருக்காகவும் வாக்களிக்க தகுதியுடையவர். பிரதேச சபை தேர்தலில் கட்சிகள் பார்க்கப்பட கூடாது, ஊர் மக்களிற்கான பணியை எவர் செய்வாரோ அவரை தேர்வு செயவதே பிரதேச சபை தேர்தல். ஆனால் பிரதேச சபை தேர்தலையும் முழுமையான அரசியலாக்கியது தற்போதைய ஆளும் கட்சியே. பிரதேச சபை தேர்தல் கட்சிகளிற்கான தேர்தல் அல்ல.
காரைநகர் பிரதேச சபையில் வெற்றி பெற்றவராக யார் ஆட்சி அமைத்தாலும் அவருக்கான அனுசரணையை வளங்குவதற்காக உங்களை தேர்தலில் நிறுத்திய கட்சிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, அடுத்த தடவை அந்த கட்சியில் தேர்தலில் இடம் தர மாட்டார்கள் ஆனால் மக்களிற்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இப்பவே சந்தர்ப்பம் கிடைக்கிறது, அதனூடாக அடுத்த தேர்தலில் மக்கள் உங்களிற்கான இடத்தை வளங்குவார்கள்.
காரை மண்ணின் தலைசிறந்த அரசியல்வாதியும், காரை மக்களின் கல்விக்கண்ணாக திகழும் காரை இந்துக்கல்லூரியின் பிதாமகனுமான கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் பாராளுமன்றத்திலே எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டு பாதேட்டு வாக்கெடுப்பில் ஆளுங்கட்சிக்காக வாக்களித்திருந்ததும், அந்த ஒரே ஒரு வாக்கினால் தான் ஆளும் கட்சியின் பாதேடு அங்கீகரிக்கப்பட்டதும், அரசியலில் அன்று அது பெரும் புரட்சியாகவே கருதப்பட்டது என்பதும், மக்கள நலனிற்காகவே அதனை ஏன் எதற்காக அப்படி செய்தார் என்பதையும் எங்களூர் வெற்றிபெற்ற அரசியல்வாதியான கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின் வரலாறு மூலம் மேலும் பல அரசியல் அனுபவம் பெறலாம்.
விளங்கிக்கொண்டால் நல்ல அரசியல்வாதியாகலாம். விமர்சிப்பவர்கள் முகநூலில் மட்டும் வடை சுட்டவர்களாகவும் ஆவீர்கள்.
இதுவரை வாசித்துள்ளீர்கள்…உங்கள் நேரத்திற்கு நன்றி.



