நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025.

நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..!

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025.

காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த இரண்டரை ஆண்டுகளாக தற்காலிக நிர்வாக சபையின் நிர்வாகத்தில் சரிவர இயங்க முடியாமல் இருந்துள்ளது.

அதற்கு காரணமாக தற்காலிக நிர்வாக சபையினரால் கூறப்பட்ட காரணங்களில் முக்கியமானது யாதெனில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் இருப்பதும் நிர்வாக சபை உறுப்பினர்களில் குறிப்பாக செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் நிர்வாக சபையின் தீர்மானங்களிற்கு அமைவாக செயற்படாமலும் தன்னிச்சையான முடிவுகளை தாமே செயற்படுத்தி வருவதாலும் வழமையான பல செயற்பாடுகள் கடந்த இரண்டரை வருடங்களாக காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய தற்காலிக நிர்வாக சபையினரால் செயற்படுத்த முடியவில்லை என்பதாகும்.

இந்த நிலையில் “எனது ஊர் காரைநகர்” தீசன் திரவியநாதன் மூலமாக கடந்த மாதம் 20.07.2025 மற்றும் 24.08.2025 இரண்டு தடவைகள் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு ஆக்கபூர்வமாக நிரந்தர நிர்வாக சபையை அமைப்பதற்குரிய வகையில் ஆலோசிக்கப்பட்டது.

இருந்த போதிலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் முன்னாள் நீர் விநியோக ஊழியர்களினால் தொடரப்பட்ட வழக்கு தொழிலாளர் வழக்காக மாற்றப்பட்டு அதிலிருந்து வெளிவரமுடியாத நிலமையில் அல்லது குறைந்த பட்சம் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான நஷ்ட ஈட்டினை வழங்க முன்வந்தால் மட்டுமே அதிலிருந்து வெளிவர முடியும் என பலரும் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்து வந்தனர்.

ஆனால் 26.08.2025 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விவாதத்தின் போது ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் மேற்படி வழக்கை தள்ளுபடி செய்ததுடன் இலாபநோக்கற்ற அமைப்பாக இயங்கி வரும் காரைநகர் அபிவிருத்தி சபையின் முன்னாள் ஊழியர்களிற்கு பணிக்காலத்தின் போது போதியளவு வேதனம் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களும் “காரைநகர் அபிவிருத்தி சபையின்” சேவைகளை பெற்றுள்ளதுடன் இலாப நோக்கற்ற அமைப்பு என்று தெரிந்து கொண்டே தான் பணிக்கு சேர்ந்தார்கள் என்றும் பணியை விட்டு விலகிய பின்னர் தமக்கான நஷ்ட ஈட்டினை கோரமுடியாது என்றும் கடந்த மூன்றாண்டுகளிற்கு மேலாக நடைபெற்ற வழக்கினை தள்ளுபடி செய்து இன்று 26.08.2025 தீர்ப்பு வளங்கியுள்ளார்.

2022 ம் ஆண்டு அப்போதைய தலைவராக பணியாற்றிய திரு. சிவசுப்பிரமணியம் இராமநாதன் தலைமையிலான நிர்வாக சபையானது காரைநகர் அபிவிருத்தி சபையின் நீர் விநியோகத்திற்காக பணி புரிந்தவர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கியதுடன் அவர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவுமே முன்னாள் ஊழியர்கள் இருவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அப்போதைய செயலாளராக கடமையாற்றிய திரு.M.S. செந்தூரன் அவர்கள் முறையாக தனது பதிவுகளை மேற்கொண்டிருந்ததும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததும் நீதிமன்றத்திற்கு போதிய ஆவணமாக இருந்துள்ளதும் மாதம் ஒன்றிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய்கள் வரை இருவரும் வேதனமாக பெற்றுள்ளதும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே இலாப நோக்கற்ற வகையில் இயங்கும் “காரைநகர் அபிவிருத்தி சபை” யிடம் பணியை விட்டு நீக்கியமைக்காக மேலதிக நஷ்ட ஈடு கோரமுடியாது எனவும் வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.

இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கி இத்தீர்ப்பானது கடந்த இரண்டு தடவைகள் கலந்துரையாடலில் அனுபவமும் திறமையும் வாய்ந்தவர்கள் கூட நினைத்துப்பார்க்க முடியாதளவில் அமைந்துள்ளதானது நல்லதை நினைத்தால் கடவுள் மிகமிக சிறப்பான முடிவை வழங்கியுள்ளதாகவே கருதப்படுகிறது.

அதே போன்று தற்போதைய தற்காலிக நிர்வாக சபை மீது மற்றொரு வழக்காக நிர்வாக முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கானது திரு.வி.ஹம்சன் தலைமையிலான தற்காலிக நிர்வாக சபை ஊர் மன்றத்தின் நலன்கருதி விட்டுக்கொடுப்புகளிற்கு முன்வரும் பட்சத்தில் எதிர்வரும் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் வழக்கு தொடுனரான திரு. குருபரன் சுப்பிரமணியம் அவர்களால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்பதனையும் வழக்கு தொடுனர் அறியத்தந்துள்ளார்.

தன்னிச்சையாக நிர்வாக சபையின் அனுமதி இன்றி அல்லது அவர்களிற்கு அறிவிக்காத வகையில் ‘காரைநகர் மாணவர் நூலகத்தில்’ கூட்டம் கூட்டியது தொடர்பாகவே தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஒன்றரை வருடத்தில் இவ்வழக்கு தொடர்பாக தலைவர் மற்றும் பொருளாளர் காரைநகர் அபிவிருத்தி சபையின் 80,000(எண்பதாயிரம் ரூபா) வரை செலவு செய்துள்ளதாகவும், செயலாளர் தனிப்பட்ட வகையில் தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் தனது சொந்த நிதியை பயன்படுத்தி வந்துள்ளார் என்பது மேலதிகமாக அறிந்து கொள்ளப்படுகிறது.

நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லை.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய அடியவர்கள், அயலவர்கள், ஊரவர்களிற்கு மகிழச்சிகரமான செய்தி: 27.08.2025 சதுர்த்தி நன்னாள்.

Leave a Reply