காரைநகர் மக்களினால் மதிப்புடனும் உயரிய கெளரவத்துடனும் வழியனுப்பி வைக்கப்பட்ட 95 வயது முதியவர்: திரு.கந்தப்பு நடராசா.

காரைநகர் மக்களினால் மதிப்புடனும் உயரிய கெளரவத்துடனும் வழியனுப்பி வைக்கப்பட்ட 95 வயது முதியவர்: திரு.கந்தப்பு நடராசா.

காரைநகர் களபூமியை சேர்ந்தவரும் மாவீரன் குலேந்திரன்(சங்கர்லால்) அவர்களின் தந்தையெனவும் காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்டவரும் கடந்த மாதம் வரை விவசாயம் செய்து வந்தவருமான திரு.கந்தப்பு நடராசா அவர்கள் தனது 96வது வயதிலே 13.11.2025 அன்று இயற்கை எய்தினார்.

போர் ஏற்படுத்திய வலிகளில் இருந்து இன்னமும் மக்கள் வெளிவரவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்த முதியவரின் வலிகளை தமது சொந்த வலிகளாகவும் சுமந்து 1986ம் ஆண்டு முதல் இந்த முதியவரிற்கு அன்பும் ஆதரவும் கொடுத்து தாங்கிக்கொண்டவர்களாக களபூமி வாழ் மக்கள் மட்டுமன்றி காரைநகர் மக்கள் பலரும் இன்று நடைபெற்ற அன்னாரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு மனம் விம்மியதை அறிந்து கொள்ள முடிந்தது.

96 வயது முதியவரின் இழப்பிலே இன்று காரைநகர் மக்கள் பலரின் மனங்களிலே வந்து போன பழைய 1986ம் ஆண்டு நினைவுகளே முதியவரின் இழப்பிலே குடிகொண்டிருந்தது எனலாம்.

1986ம் ஆண்டு, காரைநகரின் சனத்தொகை ஐம்பது ஆயிரத்திற்கு கிட்டவாக இருந்திருக்கும். வளவுகள் எல்லாம் வீடுகள், வீடுகள் எல்லாம் மனிதர்கள். போராட்டம் ஆரம்பித்த 1983ம் ஆண்டு காரைநகரில் இருந்து மானிப்பாய் ஊடாக பாடசாலைகளிற்காக பேரூந்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்களை பேரூந்தில் இருந்து இறக்கி காவு கொள்ளப்பட்ட இளைஞர்களில் காரைநகர் இளைஞர்களும் இருந்த காரணத்தினால் என்னவோ போராட்டத்தில் குதித்த இளைஞர்களில் நிறைய பேர்கள் காரைநகர் இளைஞர்கள்.

அன்றைய காலத்தில் யாழ் மாவட்டத்திலே TELO என்றாலே காரைநகர் இளைஞர்கள் அதிகமாக இணைந்திருந்த அணியாகும். அதன் பின்னர் சகோதரப்படுகொலைகள் யாழ் மாவட்டத்திலே கொத்துக்கொத்தாக படுக்கையிலே வைத்து கொல்லப்பட்ட போதும் காரை மண் அன்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்து பத்தாயிரத்த்திற்கும் அதிகமான காரை மக்கள் திரண்டு பலரையும் காப்பாற்றியிருந்தனர். ஆனாலும் குலேந்திரன் எனப்படும் சங்கர்லால் அவர்களை காப்பாற்ற முடியாதளவில் காரைநகர் மக்கள் தவித்தார்கள். காரணம் சங்கர்லால் எனப்படும் இளைஞரின் போர் சாகசங்களை அறிந்தவர்களும் சகபோராளிகளை எச்சந்தர்பத்திலும் தனது உயிரை கொடுத்து காப்பாற்றும் வல்லமை படைத்தவர் என்பதையும் அவருடைய நண்பர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

அதன் காரணமாக சங்கர்லால் அவர்களது இழப்பு காரைநகர் மக்களிற்கு இன்றுவரை ஈடு செய்ய முடியாத இழப்பாகவே 96 வயதான முதியவர் திரு.கந்தப்பு நடராசா அவர்களை காணும் பொழுதெல்லாம் ஏற்பட்டாலும் அந்த முதியவரின் மேல் காரைநகர் மக்கள் அன்பும் பாசமும் வைத்திருந்தார்கள்.

1986ம் ஆண்டு தீசன் திரவியநாதன் ஆகிய எனக்கு 13 வயது மட்டுமே ஆனால் கொக்காவில் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஞானேஸ்வரன் – கணக்கன்(மீசோராம்) அவர்களது பிரிவின் போது காரைநகர் சம்பராமூர்த்திகேணி க்கு அவரது இல்லத்து காரைநகர் கடலில் மூழ்கும் அளவிற்கு மொத்த யாழ் அணியும் வந்திருந்தனர். இன்றும் காரைநகர் என்றால் TELO என்றும் அந்த சகோதரப்படுகொலைகளிற்கு பின்னர் போராட்டம் சாத்தியமற்றதாக விலகியே வாழ்ந்து வருகிறார்கள்.

யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்..!

நீதி வேண்டும் தான்…. எங்கிருந்து ஆரம்பிப்பது நீதிக்கான போராட்டத்தை…!

இதோ இன்று 96 வயது வரை வாழ்ந்த இந்த முதியவரின் வைராக்கியம் எல்லோர் மனங்களிலும் குடிகொள்ளட்டும். வாழ்க்கையை வரலாறு ஆக வாழ்ந்துவிட்டு போன திரு.கந்தப்பு நடராசா அவர்களின் ஆத்மா பேரின்பத்தில் திழைத்து பெருவாழ்வு வாழ இறைச்சுவோமாக..!

More From Author

வடமாகாணத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரஸ் அவர்களது 10.11.2025 அன்று ஏற்பட்ட திடீர் மரணம் ஏற்கமுடியாத வியப்பில் ஆழ்த்தியது.

திருமதி மகேஸ்வரி சிவசம்பு 14-Nov-2015

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.