காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…!
கோணன் ஓடை..? காரைநகர் மக்களிற்கு மட்டுமல்ல, வலந்தலை வாழ் மக்கள் பலரிற்குமே இந்த வீதி எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாத இந்த 350 M நீளமான இந்த வீதி சயம்பு வீதி ஊடாக பயணித்தால் லொறிக்கார சிவலிங்கம் வீட்டு முன்னால் தொடங்கி பண்டித்தாழ்வை இணைக்கும் வீதியாகும்.
இந்த கோணன் ஓடை வீதியில் 15 குடும்பங்களிற்கான காணி வளவுகள் இருந்தாலும், 5 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த 350 M நீளமான வீதி 3 மில்லியன் ரூபா செலவில் முதன் முறையாக கல்லுறோட் போடப்படுகின்றது. இதனை காரைநகர் பிரதேச சபை செயலாளர் கி.விஜேஸ்வரன் அவர்கள் தனது பணிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய முடித்துக்கொடுக்க முன்வந்தமையும் அதனை நிறைவேற்றி வருகின்றமையும் பராட்டத்தக்கது.
வரலாற்றில் இற்றைவரை கல்லு றோட் காணத இந்த 350M நீளமான 5 குடும்பங்கள் வசிக்கும் 15 காணி வளவுகளை கொண்ட இந்த மண்றோட் ஏன் முக்கியத்துவம் பெற்றது…? வரலாற்றில் இதுவரை கண்டு கொள்ளப்படாது இருந்த இந்த மண் றோட் ஆனது பிரதேச சபை செயலாளர் திரு.கி.விஜயேஸ்வரன் அவர்களது முன்னெடுப்பில் சயம்பு வீதியில் தொடங்கி பண்டித்தாழ்வு வரையான இந்த ‘ஓடை வீதிக்கு’ கல்லுறோட் போடும் பணி கடந்த இரண்டு வாரமாக நிறைவேற்றப்படுகிறது… (ஏன் என்பதற்கான காரணத்தை கண்டு கொள்ளவேண்டுமாயின் தொடர்ந்து வாசிக்க வேண்டும்)…
J/47 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட இந்த வீதியில் “எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் சேவையாளர் கெளரவம் பெற்ற திரு.வே.செல்வராசா அவர்களது வீடும் காணியும் உள்ளதுடன். இப்பகுதிக்கான(J/47) கிராம சேவகர் காரியாலயம் மற்றும் கலாசார மையம் அமைக்கவும் 2 பரப்பு காணியினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தால் பிரதேச செயலகம் ஊடாக அதனை நிறைவேற்ற முன்னைய அரச முன்வந்தது. அதனை அதனை இப்பகுதி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.ப.தவமணி அவர்கள்
” எனது ஊர் காரைநகர் ” தொகுப்பாளரும் கனடாவில் வசிப்பவருமான தீசன் திரவியநாதன் ஆகிய என்னை தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தார்.
நடுத்தெரு, சடையாளி, மருதடி, மல்லிகை, பெரியமணல், நீலிப்பந்தனை அம்மன் கோயிலடி உட்பட பல இடங்களிலும் J/47 கிராமசேவகர் காரியாலயம் அமைக்க காணியை பெற்றுக்கொள்ள என்னால் தனிப்பட்டளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீலிப்பந்தனை அம்பாள் கோயில் முன்னணியில் தெற்கு பக்கமாக மடைப்பள்ளி முன்னாள் உள்ள குமாரசாமி பங்கு, விஸ்வநாதன் பங்கு என கோயில் முன்னாள் காலம் காலமாக கவனிப்பாரற்றும் பயனற்ற வகையிலும் உள்ள காணியினை பணம் கொடுத்து கொள்வனவு செய்து பிரதேச செயலகத்திற்கு வளங்க பல வழிகளிலும் நான் முயற்சித்தேன். தொடர்புகள் அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் அசட்டை செய்து வந்த நிலையில் எனது நண்பனும், காரைநகர் மக்கள் நலனில் அக்கறை கொண்டருமான திரு.வே. செல்வராசா அவர்கள் தனது காணியினை வளங்க முன்வந்தார்.
முறையான வீதி இன்றியும், மாரி காலத்தில் மழை வெள்ளம் நிரம்பிய பகுதியாக இருப்பதாலும் கோணன் ஓடையில் J/47 கிராம சேவகர் பிரிவு காரியாலயம் மற்றும் கலாசார மையம் அமைக்க பிரதேச செயலகம் ஏற்றுக்கொள்ளுமா என்கிற சந்தேகமும் இருந்தது. அதனை அப்போதைய பிரதேச செயலர் திரு.ஜேகூ அவர்களை தொடர்பு கொண்டு வினவியதுடன் ஒன்றரை பரப்பு காணியினை கொள்வனவு செய்து வளங்கினால் கிராம சேவகர் காரியாலயம் மட்டும் அமைக்கலாம் எனவும், 2 பரப்பு காணியினை கொள்வனவு செய்து வளங்கினால் J/47 கிராம சேவகர் காரியாலயம் மற்றும் கலாச்சார மையம் உட்பட்ட கட்டிடம் அமைத்து தரப்படும் என உறுதி வளங்கப்பட்டது.
அதனையடுத்து திரு.வே.செல்வராசா அவர்களது குடும்ப பின்னணி மற்றும் அவருடைய விசேட மருத்துவ தேவையுள்ள மகளை கொண்டுள்ள எனது நண்பனின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இரண்டு பரப்பு காணிக்கான அப்போதைய பெறுமதியை விசேட தேவையுள்ள நண்பனின் மகளின் பெயரில் வங்கியில் வைப்பிலிட்டு வளங்கியதுடன் காணி உரிமையாளரான திரு.வே.செல்வராசா அவர்களது பெயரிலேயே காரைநகர் பிரதேச செயலகத்திற்கு 2 பரப்பு காணி அன்பளிப்பாக எழுதி வளங்கப்பட்டது. (“காரைநகர் சேவையாளர்” கெளரவம் திரு.வே.செல்வராசா அவர்களிற்கு 2023 இல் ஏன் வளங்கப்பட்டது என்பதற்கான காரணத்தை இப்போதாவது முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்,(எனது நண்பன் என்பதற்காக அல்ல).
2022ம் ஆண்டு அதற்கான அத்திவாரமும் இடப்பட்டது. ஆனால் இலங்கையின் அரசியல் சூழ்நிலை, பொருளாதார வீழ்ச்சி என்பவற்றால் “எனது ஊர் காரைநகர்” நினைத்தவை நிறைவேறாமல் தடைப்பட்டன.
1). “எனது ஊர் காரைநகர்”
2). ” எனது பிரதேசம் வலந்தலை J/47″,
3). “எனது ஆரம்ப பாடசாலை சடையாளி” ,
4). “எனது மேற்படிப்பு காரை இந்துக்கல்லூரி”
5). ” எனது குலதெய்வம் நீலிப்பந்தனை அம்பாள்”
6). ” எங்கள் ஊர் கோயில் காரை சிவன்”
பத்தாயிரம் மைல்களிற்கு அப்பால் கனடா தேசத்திற்கு எனது 17வது வயதில் (1989.10.06) எல்லாவற்றையும் துறந்து உயிர் பிழைக்க ஓடி வந்த போதிலும் “எனது அன்றைய எல்லாவற்றையும்” இன்றுவரை அதே நினைவுகளுடன் கண்ணில் உயிர் போல காத்து வருகிறேன். என்னாலான அனைத்தையும் முழுநேரமாக மேற்கூறிய அனைத்திற்கும் சமர்ப்பித்தும் வருகிறேன்.
கனடாவில் காரை கலாசார மன்றம் முதல், காரை இந்து பழையமாணவர் சங்கம் ஈடாக, காரைநகர் அபிவிருத்தி சபை, காரைநகர் பிரதேச சபை ஊடாக எனது உழைப்பும் முயற்சியும் என்றும் எப்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். என்னால் நடப்படும் விதைகள் காலம் கடந்தாலும் அதன் பயனை மக்களிற்கு வளங்கியே தீரும்.
இது “விளம்பரம்” தான். எனக்கான விளம்பரம்.
விளம்பரம் மட்டுமல்ல காரைநகர் பிரதேச சபை தேர்தலுக்கு முதல் நாள் வரை “தான் யாரென்று தெரியாமல், தனது திறமை என்னவென்று தெரியாமல், தான் எதற்காக போட்டியிடுகிறேன் என்று தெரியாமல், வெற்றி பெற முடியாத நிலையிலும், வெற்றி பெற்ற பின்னரும் என்ன செய்ய போகிறேன் என்று தெரியாமலும் காரைநகர் வேட்பாளர்கள் 78 பேரிற்கும் இது சமர்ப்பணம்.
… கீழே படங்களில் 2022 கோணன் ஓடை திரு.வே.செல்வராசா அவர்களின் 2 பரப்பு காணி கையளிப்பு, அத்திவாரம் இடப்பட்டது, பின்னர் கடந்த வாரம் கோணன் ஓடை கல்லுறோட் முதன்முறையாக போடப்பட்டது வரை…














நன்றி சொல்வோம் இடமாற்றம் பெற்றுச்செல்லும் காரைநகர் பிரதேச சபை செயலாளர் திரு.கி.விஜயேஸ்வரன் அவர்களுற்கும் பிரதேச சபை ஊழியர்களிற்கும். காரைநகர் பிரதேச சபை செயலாளராக கடந்த காலத்தில் பணியாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் திரு.கி.வியஜேஸ்வரன் அவர்கள் தனது அரச பணிகளை செவ்வனே நிறைவேற்றியும் காரை மக்களின் கருத்துக்களை உள்வாங்கியும் செய்பட்டார் எனவும் “எனது ஊர் காரைநகர்” ஊடாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் பலவற்றினை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பல நடவடிக்கைகளிற்கு உடனடியாகவும் முடிந்தவரை தனது முயற்சிகள் ஊடாகவும் வசதிகளையும் தேவைகளையும் நிறைவேற்றி வளங்கியுள்ளார் எனவும், 2024 இல் குறுகிய கால இடைவெளியில் நீலிப்பந்தனை- மல்லிகை 100 M வீதி தற்காலிக புனரமைப்பிற்காக பிரதேச சபையின் ஆளணி, உபகரணங்களை வளங்கியதுடன் மேலும் இப்பகுதி மின் விளக்குகளை சரி செய்ய வசதிகளை வளங்கி உதவியவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனாலும் ஆதாரமற்ற வகையில் தமது சுய விருப்பு வெறுப்புகளிற்கு உட்பட்டு நடைபெறும் சில விடயங்களிற்காக எமது ஊரில் பணியாற்றி தனது சுய விருப்பின் பெயரில் இடமாற்றும் பெற்று செல்லும் திரு.கி.விஜயேஸ்வரன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் அவரவர் தமது சுய விமர்சனங்கள் என்பதும் இவ்விடத்தில் காரை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
திரு.கி.விஜயேஸ்வரன் அவர்கள் அரச பணியாளர் எனவும் சட்டம், ஒழுங்கு அடிப்படையில் காரை மக்களால் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது முற்றிலும் சட்டம் ஒழுங்குற்கு கட்டுப்பட்டவர் என்கிற ரீதியில் அதனையே பின்பற்றியுள்ளார் என்பதையும் தொடர்ந்தும் பின்பற்றுவார் என்பதுவும் இலங்கை ஜனநாயக குடியரசின் அரச பணியாளர்களிற்கான சட்டம் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.
காரைநகர் பிரதேச சபையில் அடுத்த வாரம் எந்த கட்சி ஆட்சியமைத்தாலும்… ஆட்சியமைக்காது போனாலும்…
காரைநகரில் பிரதேச சபை ஊடாக நிறைவேற்றப்பட்ட பணிகள் மட்டுமே மக்கள் அறிந்து கொள்ள வெளிக்கொண்டு வரப்படும். பிரேரணைகள் மற்றும் வேண்டுகோள்களை முன்வைத்தோம் என நிறைவேறாத எந்த பணிகளும் சாத்தியமற்றவைகள் என்ற அடிப்படையில் செய்தியாக “எனது ஊர் காரைநகர்” எடுத்துவர மாட்டாது என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறது.



