காரைநகர் மக்கள் பலே கில்லாடிகள். கட்சிகளுற்கு 2 என்னும் அடிப்படையில் கொடுத்துள்ளார்கள். மக்களின் ஒற்றுமையை பற்றி சிலாகித்துக்கொண்டவர்கள் இனிமேல் தான் பிரதேச சபையில் உறுப்பினர்களின் ஒற்றுமையை பார்க்கப்போகிறார்கள். முதலில் எப்படி ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதே மிகவும் சவாலானதாகத்தான் இருக்கப்போகிறது. எந்த ஆறுகள் இணைந்து கொள்ள போகின்றன என்பதையும் சுழற்சி முறை தவிசாளர்களும் சுழலப்போகிறார்கள்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அரசியல்ல எல்லாம் சகஜம்ப்பா..!
காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் மிகவும் சிறப்பு..! எல்லோரிற்கும் பங்கு. எல்லோரும் சேர்ந்தால் தான் அபிவிருத்தி என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்திக்கொண்டார்கள். ஆளுக்கு 2 சீற்றுக்கள்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தான் மத்தியில இருந்து நிதி வரும் என சொன்ன NPP வண்டி வண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்ட, சாதிய ரீதியாக தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என கூறிய மாட்டுவண்டி அதிக வாக்குகளை பெற்று திருப்தியடைய, பிரதேச சபை உருவாக காரணமாக இருந்த UNP யும், தமிழ் தேசிய உணர்வு மங்கிப்போகாமல் சைக்கிளும், புதிதாக மான் மூன்றாவது இடத்தில் அதிக வோட்டுக்களுடனும் ஆளுக்கு இரண்டு சீற்றுக்கள் என தேர்தல் ஆணையகத்தின் முறையோ அல்லது ஆண்டவனின் கட்டளையோ அனைவரும் அமைதி கொள்க. வீடு ஒன்றே போதும். அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள் காரைநகர் மக்கள்.
அடுத்த மாதம் 5ம் திகதிக்கு முன்னர் ஆட்சி அமைக்கப்பட்டு, அடுத்து வரும் மூன்று மாத காலத்தினுள் பிரதேச சபைக்கான பாதேடு முன்வைக்கப்படும், அதை மேற்படி இரண்டுகளை பெற்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டும், ஆதரிக்கவில்லையெனில், திருத்திய பாதேடு, அதையும் ஆதரிக்கவில்லையெனில் ஆறு மாதங்களில் காரைநகர் பிரதேச சபை கலைக்கப்படும்.
எனவே மக்களின் தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு ” நான் பெரிது, நீ பெரிது ” என்ற சுயபந்தாக்கள் இல்லாது காரைநகர் அபிவிருத்தியே முதன்மையாக கொண்டு செயற்படவும் ஒற்றுமையே அதன் முதல் முயற்சியாகவும் இருந்தால் மட்டுமே ஊர் வளம்பெறவும் பிரதேச சபை தேர்தல் மிகச்சிறந்த முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.



