நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Karainagar

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை அறிவித்தல்.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை அறிவித்தல்.

கடந்த சித்திரை(April) மாதம் முதல் நித்திய பூசைக்காக மாதாந்த அடிப்படையில் அடியவர்கள் உபயகாரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட நிர்வாக செயற்பாட்டாளர்கள் மூலம் நித்திய பூசை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

மாதாந்த நித்திய பூசை உபயகார ர்களாக இணைந்து கொள்ள நிர்வாக செயற்பாட்டாளர்களை அணுகவும். உங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயர், நட்சத்திரத்தோடு மாதாந்த நித்திய பூசைகள் நடைபெறும்.

ஆவணி(August) மாத உபயம்: சிற்றம்பலம் திருநாவுக்கரசு குடும்பம்.

நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலயத்தின் நித்திய பூசை மற்றும் நாளாந்த பராமரிப்பு என்பவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களிலும் அன்றாட செயற்பாடுகளை இடையறாது செயற்படுத்தும் வகையில் நிரந்தர வங்கி வைப்பில் நிதி சேகரிப்பையும் மேற்கொண்டு வருகிறது. மாதாந்த நித்திய பூசைகளிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட அடியவர்கள் இணைந்து கொள்கின்ற போது மேலதிக நிதி நிரந்தர வைப்புக்காக சேமிக்கப்படுகின்றது என்பதும், திருப்பணி மற்றும் திருவிழாக்கள் அடியவர்கள் விருப்பத்தின் பெயரில் அவர்களது சொந்த நிதியின் மூலம் மட்டுமே நிறைவேற்றப்படும் என்பதனையும், மாதாந்த நித்திய பூசைகளிற்காக வழங்கப்படும் நிதியில் இருந்து திருப்பணிக்காக நிதி பயன்படுத்தப்படமாட்டாது என்பதனையும் நிர்வாக செயற்பாட்டாளர்கள் சார்பாக அறியத்தருகிறேன்.

புதிய திருப்பணிகள் எவையும் திட்டமிடப்படாத வகையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டிய சில திருப்பணிகள் மட்டும் அதற்கென அடியவர்கள் மனமுவந்து வழங்கும் நிதி மூலம் நிறைவு செய்யப்படவுள்ளன.

கடந்த சித்திரை மாதம் முதல் மாதாந்த நித்தியபூசைகள் ஒழுங்கு செய்யப்பட்டதன் பின்னராக கணக்குகள்(வரவு, செலவு) டிசம்பர் 31 வரையான விபரங்கள் ஜனவரியில் பொதுவில் வெளியிடப்படும். குறிப்பாக மாதாந்த நித்திய பூசை உபயகாரர்களுற்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் நிர்வாக செயற்பாட்டாளர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக தொடர்பு கொள்ள:

திரு. சிவறைஞ்சன் பாலகிருஸ்ணன் 011 94 (77) 690 289(சம்பந்தர்கண்டி நாகலிங்கம் பேரன்).

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605