காரைநகர் இந்துக்கல்லூரியின் ஆரம்பம் அமரர் முத்து சயம்பு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அன்னாரின் நினைவாக அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களால் கட்டப்பட்ட காரைநகரின் முதலாவது இரண்டு மாடிக்கட்டிடம் மீளபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துக்கல்லூரியின் அடுத்த சகாப்தம்.

காரைநகர் இந்துக்கல்லூரியின் ஆரம்பம் அமரர் முத்து சயம்பு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அன்னாரின் நினைவாக அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களால் கட்டப்பட்ட காரைநகரின் முதலாவது இரண்டு மாடிக்கட்டிடம் மீளபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

“எனது ஊர் காரைநகர்” ஊடாக முதன் முதலில் 2017ம் ஆண்டு இந்த கட்டிடத்தின் மோசமான நிலமை குறித்து செய்தி வெளியிட்டது. பின்னர் இக்கட்டிடம் கல்வித்திணைக்கழத்தினால் சீல் வைக்கப்பட்டது. 60 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடம் இடித்து தரமட்டமாக்கப்படவிருந்தது. இக்கட்டிடத்தை மீள அமைப்பதற்கு கோடி கோடியாக பணம் வேண்டுமே… !

மண்ணின் பெருமை அறிந்தும், கட்டியவரின் பெயர் அறிந்தும், அழிப்பதில் அல்ல ஆக்குவதன் திறன் அறிந்தும் பொறியியல் துறையின் ஆக்கத்தினால் 3 மில்லியன்(முப்பது இலட்சம்) ரூபா செலவில் மீளெழுச்சி கண்டுள்ளது “காரைநகர் இந்துக்கல்லூரி சயம்பு ஞாபகர்த்த இரண்டு மாடி கட்டிடம்”

வெகுவிரைவில் மீள்திறப்பு விழா. அனைவரும் வருக ஆளுக்கொரு மாலை பெறுக. மாலைகளை பெறவிரும்புவோர் விண்ணப்பம் செய்யவும். உங்களிற்கான மாலைகளை உடனடியாகவும் தரமானதாகவும் புத்தம் புதிய பூக்களால் தயாரிக்கப்பட்டு வளங்கி கெளரவிக்க ‘எனது ஊர் காரைநகர்’ எப்போதும் தயாராக உள்ளது.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.

காரைநகர் வலந்தலை பறையகண்டி சந்தியின் புதிய பரிணாமம்.

Leave a Reply