நாள் : Saturday, September 5, 2026
--:--:--
👁️
Karainagar

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை செயற்பாடு ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தி(01.04.2025 – 31.03.2026).

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை செயற்பாடு ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தி(01.04.2025 – 31.03.2026).

2025 ஏப்ரல் மாதம் முதல் ஆதீனகர்த்தாக்களினால் நியமிக்கப்பட்ட செயற்பாட்டு நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த நித்திய பூசை ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாகவும் கிரமமாகவும் நடைபெற்று வருவது துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்களிடத்தில் பெரும் பக்தியையும் பரவசத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொடர்ந்து தமது நிவர்த்திகளையும் விசேட நாட்களிற்கான விசேட அபிஷேக ஆராதனைகளிலும் ஈடுபட்டு தமது வழிபாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருடமாக கோயில் அர்ச்சகருக்கான மாதாந்த வேதனம் கட்டுப்படுடியான வகையில் கிரமமாக வழங்கப்படுவதுடன், கோயில் உதவியாளர் மற்றும் பராமரிப்புக்கான செலவுகள் வழங்கப்படுவதுடன் நித்திய பூசை நிரந்தர வைப்பு நிதியம் குறிப்பிடத்தக்களவு கடந்த ஒரு வருடத்தில் உயர்ச்சியும் பெற்றுள்ளது.

மாதாந்த நித்திய பூசை செயற்பாடுகளிற்காக உபயகாரர்கள் மூலம் பெறப்பட்ட கடந்த ஒரு வருடகால (01.04.2025 – 31.03.2026) வரவு செலவு விபரங்கள் தொடர்பாக ஆதீனகர்த்தாக்கள் சார்பாக திருமதி சோமசேகரம்பிள்ளை செல்வராணி அவர்களுடனும் செயற்பாட்டு குழு உடறுப்பிர்களுடனும் கடந்த ஒரு வருடத்திற்கான மாதாந்த நித்திய பூசை வரவு செலவு கணக்கு வெளியிடுவது தொடர்பாக கணக்குகள் இறுதி செய்யப்பட்டன. தொடரும் இரண்டொரு தினங்களில் மாதாந்த நித்திய பூசை கணக்குகள் வெளியிடப்படுவதுடன் துர்க்கை அம்பாள் ஆலய வழிபாடு மற்றும் செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கு கிடைக்கும் வகையில் ஆவண செய்யப்பட்டுள்ளன.

மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள், மற்றும் வரவு செலவு கணக்கறிக்கை கிடைக்கப்பெற விரும்புபவர்கள் செயற்பாட்டு குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் – +94 (77) 469 0289

கணபதிப்பிள்ளை பூவேந்திரன் – +94 (77) 797 1267

கடந்த ஒருவருட காலத்தில ஆலய நித்திய பூசை மற்றும் பராமரிப்பு செலவுகள் போக மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி நிரந்தர நித்திய பூசை கணக்கில் நிரந்த வைப்பாக சென்றடைந்துள்ளது. நிரந்தர வைப்பில் 30 இலட்சம் ரூபாய்கள் இருந்து வந்துள்ள நிலையில் தற்போது 33 இலட்சம் ரூபாய்கள் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாதாந்தம் மேலும் 15,000 ரூபாய்கள் வரையான நிதி வங்கி வட்டியாகவும் கிடைக்கப் பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.

மாதாந்த நித்திய பூசையில் இணைந்து கொள்ள அல்லது நிரந்தர நித்திய பூசை கணக்கிற்கு தங்களது நிதி உதவியினை அனுப்பி வைக்க மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்ந்து 2026 சித்திரை மாத உபயகாரர்கள் விபரம் வருமாறு:

1. ஆனந்தநடராஜா செந்தூரன் குடும்பம்

2. கந்தையா தர்மராசா குடும்பம்

3. பாலசுப்பிரமணியம் நாகராசா குடும்பம்

4. ஶ்ரீகரன் புஸ்பராணி குடும்பம்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605