காரைநகரில் தொடரும் மழையும் மழைக்கால பாதிப்புகளும்…
14.12.2024 நாளை சனிக்கிழமை மீண்டும் அதிகூடிய மழை பொழிவு இடம்பெறவுள்ளது, வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகி வருகின்ற நிலையில் இந்தியா தமிழ்நாடு வானிலையாளர்கள் கணிப்பின் பிரகாரம் தமிழ்நாடு கடலூர், சிதம்பரம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்படும் பொழுதெல்லாம் காரைநகரிலும் மழை கொட்டி தீர்க்கும் என்பது கண்டறியப்படுகிறது.
அந்த வகையில் அடுத்து வரும் 24 மணி நேரங்களில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு, திங்கள் வரை காரைநகரிலும் பெருமளவில் மழை பெய்யப்போகிறது.
அதுமட்டுமல்ல எதிர்வரும் 21ம் திகதி வரை மழை காலமும் அதற்கு பின்னரே முற்றாக மழை காலம் நிறைவிற்கும் வரும் என்பதும் வானிலை அவதானிகளின் கணிப்பும் ஆகும்.





Leave a Reply
You must be logged in to post a comment.