எதிர்வரும் சனிக்கிழமை 14.06.2025 அன்று ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது. இக்கோயிலில் நிர்வாகமோ அன்றி ஆதினகர்த்தாக்களோ இல்லாத நிலையில் வழித்தோன்றலாக நித்தியபூசை கருமங்களில் ஈடுபட்டுவரும் குருக்கள் ஐயாவினால் மட்டுமே காலை மாலை நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றது.
ஆனாலும் இவ்வாலயத்தை சூழுவுள்ள அடியவர்கள் சிலரின் உதவிகளும் அவ்வப்போது கிடைத்து வருவதாலும் ஓரளவேனும் தடையில்லாத வகையில் ஞானவைரவர் ஆலயத்தில் விளக்கு வைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் வருடாந்த பொங்கல் நிகழ்வானது தனிப்பட்ட உபயம் அல்ல என்பதுடன், சூழவுள்ள அடியவர்கள் வழமைபோல் முன்னெடுத்து வந்தாலும் நாட்டில் நிலவிவரும் திடீர் காற்று, மழை போன்ற காரணங்களால் பந்தல் அமைக்க வேண்டியுள்ளதாலும், பறை மேளம், ஒலி ஒளி அமைப்பு மற்றும் அபிஷேக, பொங்கல் போன்ற கோயில் சர்பாக ஒழுங்கமைக்கப்பட வேண்டிய தேவைகளிற்காக அண்ணளவாக மூன்று இலட்சம் ரூபாய்கள் வரை தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இலண்டனில் வசிக்கும் இப்பகுதி அயலவரான அடியவர் ஒருவர் தாமாக முன்வந்து கோயில் சுற்றுப்புறங்களை முழுமையாக சுத்தப்படுத்த ஆவண செய்துள்ளார். மேலும் இக்கோயிலில் நிர்வாகம் செயற்பாட்டில் இல்லாத காரணத்தினால் பொங்கல் மற்றும் தற்காலிக செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் உள்ளூர் அடியவர்களை தொடர்பு கொண்டு தங்களது காவல் தெய்வமாக விளங்கிவரும் ஞானவைரவர் அருள்வேண்டி பொங்கல் விழாவிற்கான அன்பளிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வறிவித்தலானது தனிப்பட்ட வகையில் எவருடைய வேண்டுகோளின் பிரகாரமும் பதிவிடப்படவில்லை. தற்போதை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஞானவைரவர் பொங்கல் திருவிழா சிறப்புற நடைபெற வேண்டும் என்னும் நோக்கில் “எனது ஊர் காரைநகர்” சார்பாக இதனை அறியப்படுத்துகிறேன்.
கோயில் சுற்றுப்புறம் சுத்தம் செய்வதற்கும் மிகுதி பொங்கல் தேவைகளுற்குமாக பணம் அனுப்பியவர், மற்றும் தொடர்ந்து பொங்கலுக்காக கோயில் சார்பான செலவுகளிற்கு நிதி அனுசரணை வழங்குபவர்கள் விபரம் இங்கு எடுத்து வரப்படும் என்பதுடன் நிதி அனுசரணை வழங்கியவர்களிற்கு விழா முடிவில் கணக்கு விபரமும் அனுப்பி வைக்கப்படும்.
| # | அனுசரணை வழங்குபவர் | அன்பளிப்பு |
|---|---|---|
| 1 | லோகன் நடராஜா | 50,000 ரூபா |
| 2 | தீசன் திரவியநாதன் | 15,000 ரூபா |
| 65,000 ரூபா |
ஞானவைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இறுதியாக 2002ம் ஆண்டு நடைபெற்றுள்ளதும் தொடர்ந்து 23 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கோயிலின் இதே நிலமையினை பேணி சிறியளவிலான புனரமைப்பும் குடமுழுக்கும் செய்ய வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளதும் அதற்குரிய திருப்பணி வேலைகளை செயற்படுத்த திருப்பணி குழு வெகுவிரைவில் அமையவும் ஞானவைரவர் இப்பொங்கல் திருவிழா ஊடாக அருள்புரிய வேண்டும் என்பதையும் வேண்டுகின்றேன்.













