காரைநகர் பாடசாலைகளிற்கு உடனடியாக பழைய மாணவர் அமைப்புக்கள் தேவை | 2023

காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கப்பட்டுள்ள கற்றல் உபகரணங்கள், தொலைபேசி, போட்டோ பிரதி இயந்திரங்கள் என்பவை பழுதடைந்தால் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் தங்கள் சொந்த செலவில் பழுது பார்த்து வருகின்றனர். இதுவே சிலதடவைகளிற்கு மேல் தொடர்ந்தும் அவர்களால் செய்யமுடியாது விரக்தியடைந்து விடும் நிலமையும், கவனிப்பாரற்ற நிலைக்கும் விட்டுவிடுகின்றார்கள்.

அது மட்டுமன்றி பாடசாலைகளிற்கு இடையே நடைபெறும் சமய போட்டிகள், நாடகப்போட்டிகள், இலக்கணப்போட்டிகள், விளையாட்டு நிகழ்வுகளிற்கு ஒரு பாடசாலையில் இருந்து இன்னோர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்லவும் அதற்குரிய இன்னோரென்னதேவைகளிற்கான பணத்தினையும் ஆசிரியர்களும் அதிபர்களுமே வழங்கி வருகின்றனர். இதன் காரணமாகவும் ஆசிரியர்களிற்கு கல்வி தவிர்ந்து மற்றைய துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்க பின்தங்குகின்றார்கள்.
இதுபோன்ற சிறிய செலவுகளையும், பாடசாலை குறைபாடுகள், உடனடி பிரச்னைகளை இனம் கண்டு கொள்ளவும் மக்களிற்கு அறியத்தரவும் இப்பாடசாலைகளில் பழைய மாணவர் சபை அமைக்கப்படல் அவசியமாகின்றது. அது மட்டுமன்றி வெளிநாடுகளிலும், யாழ்ப்பாணம்,கொழும்பு போன்ற இடங்களில் வாழும் காரைநகர் மக்களிற்கும் பாடசாலை செய்திகளையும் தேவைகளையும் உரிய முறையில் எடுத்து வரவும் பழைய மாணவர் சபைகள் அவசியமாகின்றன.

அதே போன்று வெளிநாடுகளில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் பயின்ற பழைய மாணவர்கள் தாம் கற்ற பாடசாலைகளுடன் தொடர்புகளை பேணவும் அவற்றிற்கான தேவைகளை அறிந்து உதவவும், பியோசனமுள்ள தர்ம காரியங்களில் ஈடபட்டு நிம்மதி பெறவும் வெளிநாடுகளில் காரைநகர் பாடசாலைகளின் பழைய மாணவர் சபைகள் அமைக்கப்படுவது அவசியமாகின்றது. காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றிற்கு பழைய மாணவர் சபை காரைநகரில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்
தாலும் அவற்றில் உள்ள குறைபாடுகளையும், சரிவர இயங்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களை அறிந்து சரியான தீர்வினை காண படித்தவர்கள் முன்வரவில்லை. அதுமட்டுமன்றி வெளிநாடுகள் வாழ் காரைநகர் மக்களின் பொது அமைப்புக்கள் அவற்றை கண்டுகொள்ளவோ அன்றி உதவி செய்யவோ தயக்கம் காட்டி வருகின்றார்கள்.

பாடசாலை அதிபர்களே பழைய மாணவர் சபைகளிற்கு தலைவர்களாக நியமிக்கப்படுவதால் முதல்கண் பாடசாலை அதிபர்கள் தங்களால் முடிந்தளவு பழைய மாணவர் சபைகளை காரைநகரில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களால் முடியாதவிடத்து காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் பிரச்சனைகளை கையளியுங்கள்.

அதிபர்களும், பாடசாலை ஆசிரியர்களும் ஆர்வ மிகுதியால் வெளிநாடுகள் வாழ் காரை அமைப்புக்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு குறுகிய கால அவகாசத்தில் ஒரு சிறுதொகைப்பணம் தேவையென்றும் விளையாட்டு நிகழ்வுகளிற்கோ அன்றி கல்வி, நாடக,
சமய போட்டிகளிற்கோ அதன் மூலம் மாணவர்கள் செல்ல முடியும் என்றும் அல்லது போகமுடியாது என்றும் தெரிவிக்கின்றனர். ஒரு சிறுதொகைப் பணமாக இருப்பினும் அதனை அதிபர்களாலோ அன்றி ஆசிரியர்களாலோ திரும்ப திரும்ப செலவு செய்வது முடியாத செயல் என்பதனை நாம் அறிவோம். ஆனால் அதற்குரிய நிரந்தர தீர்வை காண அதிபர்களும் ஆசிரியர்களும் முன்வரவில்லையென்பது வேதனையளிக்கும் விடயமாகும்.

அதுமட்டுமன்றி குறுகியகால இடைவெளியில் தேவைகளை கூறி பணம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை வெளிநாடுகள் வாழ் மன்றங்களில் உள்ள நிர்வாக சபை உறுப்பினர்களே தவறாக திரித்து மக்களுக்கு கூறுவதுடன் மக்களையும் கோபம் கொள்ள வைக்கின்றார்கள்.

இந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கற்பனையில் எழுதப்படுபவவை அல்ல. உண்மைகளை உணர்ந்து எழுதுகின்றோம். காரைநகரிற்கும் வெளிநாடுகளில் வாழ்பவர்களிற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை தெரிவிக்கின்றோம். ஆகவே பலவற்றை வெளிப்படையாகவே எழுத வேண்டிய தேவையும் உள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு 2007ம் ஆண்டு ஆண்கள் மலசலகூடம் கட்டி கொடுக்கப்பட்டதன் பின்னர் பெண்களிற்கான மலசலகூடம் அமைப்பதற்கும், ஊரி பாடசாலையில் கல்வி பயிலும் வறிய சிறார்களிற்கு உதவித் தொகை வழங்கவும் என ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக சேர்த்து வழங்கிய நிதி 2400 டொலர்கள் இதுவரை இந்த அமைப்புக்களினால் பெற்றுக்கொள்ளப்டவேயில்லை. கனடா காரை கலாச்
சார மன்றத்தினரை அணுகியபோதெல்லாம் அவர்கள் விளக்குவது யாதெனில் காரைநகரில் இருந்து இந்து கல்லூரி பழைய மாணவர் சபையினரும், ஊரி பாடசாலை அதிபரும் தாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென தெரிவிப்பதுடன், புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என கேள்வியும் கேட்கின்றார்கள்.

கட்டிக்கொடுக்கப்பட்ட மலசலகூடத்தை பராமரிக்க முடியாத நிலையும் கட்டியவரே பராமரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. பழைய மாணவர் சபைகள் இருப்பதை பராமரிப்பதற்கும் கொடுப்பதை பயன்படுத்தும் நிலையில் வைத்திருப்பதற்கும் இருந்தாலே முதற்கண் போதுமானதாகும்.

பாடசாலைகளில் உள்ள தொலைபேசி மாதாந்த கட்டணங்களை கட்ட முடியாத நிலையும், பழுதடைந்து கற்றல் உபகரணங்களை திருத்த முடியாது கைவிடவேண்டிய நிலைகளும் காரைநகரில் காணப்படுகின்றது. யார் இவற்றை தெரிவிப்பது? யார் இவற்றிற்கு நடவடிக்கைகள் எடுப்பது.

“அழுத பிள்ளையே பால் குடிக்கும்” என்பதனை காரைநகர் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் முதற்கண் உணர்ந்து கொள்ள வேண்டும். அவசரத்திற்கு உதவும் நிலையில் வெளிநாடுகள் வாழ் காரைமன்றங்கள் காரைநகர் சிந்தனையுடன் இங்கு இயங்கவில்லை. உரிய முறையில் தேவையானதை தெரிவித்தாலே “இருட்டில் கல்லெறிந்தவன் கதைதான்” ஆனாலும் நீங்கள் “மந்திரத்தில் மாங்காய் பறிக்கப் பார்க்கின்றீர்கள்” அது நடக்கவே நடக்காது. “கல்லிலே நார் உரித்தாலும்” கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் பற்றிய தேவைகளையும் செய்திகளையும் வெளிநாடுகள் வாழ் மக்களிற்கு வழங்கி உதவி செய்யும் என எதிர்பார்க்காதீர்கள்.

காரணம் அடுத்த மாதம் 17ம் திகதி கடந்த 10 வருடங்கள் நடந்ததைப்போல் மீண்டும் நட்டத்திலும் 10 இலட்சம் ரூபா வரை செலவிலும் கூழும் குடிபானமும் வழங்க பலமாதங்களிற்கு முன்னரே திட்டமிடப்பட்டு செவ்வனே செயற்படுகின்றார்கள். (அவர்கள் டீரளல பாருங்கோ) அதுமட்டுமன்றி இவ்வருடம் டிசம்பர் 25ம் திகதி இன்னமும் ஆறு மாதங்கள் இருக்கின்றன அதற்கும் இப்பவே கோவணத்தை வரிந்து கட்டிக் கொண்டு கிறிஸ்துவின் பிறப்பை குடிபோதையில் கொண்டாட ரவி ரவீந்திரன் தனது பரிவாரங்களுடன் தயாராகியுள்ளார். இவற்றுக்கெல்லாம் ஊரின் பெயரால் சேர்த்த பணமும், உறவுகளுக்கு கரம் கொடுப்போம் என்று 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிந்த
உறவுகளின் பெயராலும் சேர்த்த பணமும் வங்கியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

அப்பணத்தில் எங்கள் ஒற்றுமையை நிலைநாட்டுகின்றோம் ஒன்றாக கூடுங்கள் என்று கனடா காரை கலாச்சார மன்றத்தினர் தொலைபேசியில் ஒன்றுவிடாமல் எல்லோரையும் அழைப்பார்கள். ஓசியில் ஒரு கப்பும், காலை முதல் மாலை வரை மூன்று வேளை சாப்
பாடும் குடிபானமும் தருவார்கள். வாருங்கள் காரைநகர் மக்களின் ஒற்றுமையை Wikia Morning Side Park திடலில் July 17ம் திகதி நிலைநாட்டுவோம். கனடா காரை கலாச்சார மன்றத்தில் இதுவரை அங்கத்தவர்கள் 100 பேர்வரையே ஆனால் எங்கிருந்துதான் ஆயிரம் பேர் வரையானவர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்பதனை கண்டுபிடிப்போம். கடந்த 10 வருடமாக அதனை கண்டுபிடித்து சந்திக்கு கொண்டுவரவும் யாரும் தயாராக இல்லை. காரைநகர் மண்ணிற்கு இந்த மன்றம் மொத்த தொகையில் 10விகிதம் அனுப்பியதாக சரித்திரமும் இல்லை. ஊரிற்காக பணி செய்ய மன்றம் வீதிக்கு வரவேண்டும் அல்லது கனடாவில் காரைநகர் மக்கள் நடுத்தெருவிற்கு வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றி!
மீண்டும் உண்மைகளுடன் உலாவரும் வரை
தீசன் திரவியநாதன்

பி.கு: ஐடியா ஐயாத்துரை அண்மையில் கண்டுபிடித்த உண்மையொன்று….!

கனடா காரை கலாச்சார மன்றம் கடந்த மூன்று ஆண்டுகள் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட முயற்சித்தார்கள். ஆனால் 2007இல்
அன்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவையொட்டி இடைநிறுத்துவதாக அறிவித்தார்கள். 2008இல் திகதி குறிக்கப்பட்ட நிலையில்
வன்னியில் கொல்லப்படும் எண்ணுக்கணக்கற்ற மக்களிற்காக இடைநிறுத்துவதாக அறிவித்தார்கள். 2009இல் சோகத்தில் ‘உறவுக்கு கரம்
கொடுப்போம்” என்று உல்டா போட்டார்கள். 2010இல் மீண்டும் கனடாவில் இறப்பை காரணம் காட்டி இடைநிறுத்தினார்கள். இதில் இருந்து
இந்த மன்றத்தினர் புரிந்து கொள்ளவில்லைபோலும் கிறிஸ்மஸ் பார்ட்டியை நிறுத்துவதற்காகவே யார் யாரோவெல்லாம் இறந்து
போகின்றார்கள் என்று….!

  • ஐடியா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பிற்காக எல்லோரும் ஒரு தடவை ஓ போடுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்” 2009 இதழ் 7இல் வெளிவந்த ஆக்கம் ஒன்று தேவை கருதி மீண்டும் இங்கே கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த நாடுகளில் நாம் தனித்தனியாக தனித்து விடப்பட்ட நிலையிலும் ஊரின் பெயரால் மீண்டும் நாம் ஒருவரை ஒருவர் அறிந்து
கொண்டோம். ஆனாலும் இடம் பெயர்ந்த நாட்டு சூழ்நிலைகளுக்குள் நாம் எம்மையும் அறியாது மூழ்கிக்கொண்டு செல்கின்றோம். ஆகவே
எமக்கெல்லாம் பொதுவான நாம் வாழ்ந்த எமது மண்ணின் பெயரால் வேற்றுமைகளை கழைந்து இன்றே ஒன்றுபடுவோம்.

இடம்பெயர்ந்த சூழ்நிலைக்குள் அகப்பட்டு நாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் ஆசை மோகத்தால் நாம் மறந்து வாழ
முற்படுகின்றோம். காரைநகர் மண்ணில் பிறந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கனடாவில் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போதுகூட சிற்சிறிய
உதவிகளை எமது மண்ணிற்கு வளங்க முடியாத சூழ்நிலையே நிலவி வருகின்றது.

இடம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக நாம் வாழ்ந்து வந்தாலும், ஊருக்கும் ஊர் மக்களிற்கும் உதவ மனம் இல்லாதவர்களாக வாழ
இடம்பெயர்ந்த நாடுகள், அவர்களது பொருளாதார நிலமைக்குள் எம்மை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.

வசதியாக வாழ்வதாகவும், ஆடம்பரமாக வாழ்வதாகவும், பன்னீரில் கொப்பளித்து, பாலில் முகம் கழுவி, பஞ்சாமிர்தம் சாப்பிட்டு வளர்வதாக
நினைக்கும் நாம் ஊரின் அபிவிருத்திக்காகவும் ஊரின் அடிப்படை தேவைக்காகவும் வெறும் பத்து டொலர் கேட்டால் ‘வசதியில்லை” என்ற
வார்த்தையை வெட்கம் இன்றி சொல்கின்ற நிலையிலேயே இருக்கின்றோம்.

இடம்பெயர்ந்த எம்மை நம்பி இதுவரை ஏமாந்து போனது எமது ஊர். ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய்” எமது காரைநகர் மண்ணில்
ஏன் பிறந்தாய்? ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு ஆயிரக் கணக்கில் அநாவசியமாக செலவு செய்யும் எங்களையும் காரை மண்
சுமந்த பாவத்தை எங்கு சென்று ஆற்றுமோ எமது மண். ஆடம்பர வாழ்க்கையும், அநாவசிய செலவும், அர்த்தமற்ற வாழ்க்கையும்
நிம்மதியை தரப்போவதில்லையென எப்போது நாம் அறிந்து கொள்வோம்! அதுவரை எமது மண் எம்மை சுமந்தது போலவே இன்னும்
பலரையும் சுமந்தவண்ணம் காத்திருக்கும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! | 30.05.2023

நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

Leave a Reply