நடக்குமா… நடக்குமா… என்று எதிர்பார்த்த ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகத்திற்கும் நாள் குறிக்கப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. – எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவன் செயல், எது எது எப்பெப்ப நடக்க வேண்டுமோ அது அது அப்பப்ப தான் நடக்கும்.
விதை யார் வேண்டுமானாலும் போடலாம் ஆனால் அது முளைப்பது இயற்கையின் பிரகாரமே.
29.04.2026 இன்றைய தினம் வியாவில் ஐயனார் கோயில் இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க முடிந்தது ஆனால் இன்றைய தினம் தான் இந்தியாவில் இருந்து இராஜகோபுரத்திற்கான கலசங்கள் கொழும்பு வந்திறங்கின. அவற்றினை வரவழைத்துக்கொடுத்த ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகர் திரு.அருளம்பலம் கனேசலிங்கம்(லிங்கன்) தெரிவித்தார்.
அதே போன்று நடக்குமா… நடக்குமா… என்று எதிர்பார்த்த ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகத்திற்கும் நாள் குறிக்கப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விதைப்போம் விதைப்பதை நாம் நிறுத்திவிடக்கூடாது, முளைக்கிற நேரத்தை அவனே தீர்மானிப்பான். எல்லாம் அவன் செயல்.






Leave a Reply
You must be logged in to post a comment.