நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Committee Meeting

காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. 15நர்வாக சபை உறுப்பினர்களைக்கொண்டுள்ள நிர்வாகத்தில் இருந்து 12 அங்கத்தவர்கள் கலந்து கொண்டு பலவிதமான தீர்மானங்களை நிறைவேற்றியும் பல தேவைகளிற்கான உபகுழுக்கள் அமைக்கப்பட்டும் ஆக்கபூர்வமான முறையில் நிர்வாக சபைக்கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

அமைக்கப்பட்டுள்ள உப குழுக்கள் விபரம் வருமாறு:

1. குடிநீர் விநியோக குழு

2. கல்வி/ நூலக குழு

3. வைத்தியசாலை பராமரிப்பு குழு

4. சுற்றாடல் பராமரிப்பு குழு

இக்குழுக்களில் நிர்வாக சபை அங்கத்தவர்கள் தலா மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தலைவர், செயலாளர், பொருளாரும் சேர்ந்து செயற்படுவார்கள்.

ஒவ்வொரு குழுவிலும் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் செயலாளரினால் விபரமாக வெளியிடப்பட்டதன் பின்னர் அவை தொடர்பான விபரங்களும் தெரியப்படுத்தப்படும். வேண்டுகோள்களையும் முறைப்பாடுகளையும் அந்தந்த குழுவினரிடம் காரை மக்கள் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

கடந்த தற்காலிக நிர்வாக சபையினரினலிடமிருந்து உத்தியோக முறையில் அனைத்து பொறுப்புக்களையும் பெற்றுக்கொள்ள 01.11.2025 எதிர்வரும் சனிக்கிழமை நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னாள் பொருளாளர் திரு. மு.பரம்தில்லைராசா அறியப்படுத்தியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

காரைநகர் அபிவிருத்தி சபைக்கு கடிதமூலம் விடுக்கப்பட்ட பல செயற்பாடுகளில் சிலவற்றிற்கு நிதி ஒதுக்கியும் மேலும் சிலவற்றிற்கு நடவடைக்கைகள் எடுக்கவும் இன்றைய நிர்வாக சபைக்கூட்டத்தில் அங்கத்தவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

நிர்வாக சபைக் கூட்டங்களில் காரை மக்களாலும் வெளிநாடுகள் வாழ் காரை மக்கள் சார்பாகவும் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் முறைப்படி முன்வைக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகளை நிர்வாக சபையினர் மூலமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அவற்றை வெளிப்படைத்தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் நிர்வாக சபையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் எட்டப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொரு நிர்வாக சபை அமர்வின் போதும் பொதுமக்களிற்கு அறியப்படுத்தவும் தலைவர் திரு. குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு அறியத்தந்துள்ளார்.

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாக சபை கூட்டங்களில் நடைபெறும் மற்றும் நிர்வாக சபை உறுப்கினர்களால் முன்வைக்கப்படும் விடயங்கள் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏனைய சமூக ஊடகங்கள் மற்றும் செய்திகளாக காரைமக்களிற்கு நல்லெண்ண அடிப்படையில் வெளியிட்டு காரைநகர் அபிவிருத்தி சபையின் வளர்ச்சியில் பங்கெடுக்க ஆர்வமுள்ளவர்களினால் முடியும். ‘எனது ஊர் காரைநகர்’ உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆர்வம் காரணமாக மட்டுமே காரைநகர் அபிவிருத்தி சபையின் செய்திகளை அறிந்து தெரியப்படுத்தி வருகிறது.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605