காரைநகர் மத்தி பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரரேஸ்வர தேவஸ்தான கும்பாபிஷேக விஞ்ஞாபனம் |29.Aug.2022
காரைநகர் மத்தி பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தான சப்த்தள, சிவன்சன்னிதி, பஞ்சதள, அம்பாள் சன்னிதி, ராஜகோபுர சகித புனராவர்த்தன நவகுண்ட பஷ மகா கும்பாபிஷேகம் 29.08.2022 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.








24.08.2022 முதல் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 28.08.2022 அன்று எண்ணெய்காப்பு நடைபெற்று 29.08.2022 திங்கட்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
காரைநகர் வாழ் அடியவர்கள் மற்றும் இலங்கை மணித்திருநாட்டின் சைவ பெருமக்கள் அனைவரும் கலந்து பேரின்ப பெருவாழ்வு பெறும்வண்ணம் வேண்டுகின்றனர் தேவஸ்தான ஆதீனகர்த்தாக்கள்.

Leave a Reply
You must be logged in to post a comment.