வாழ்க வளமுடன்..!
இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும் ஊரும் போற்ற பல்லாண்டு வாழ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப்போல வருமா..! உழைப்பே மூலதனம், உண்மை தான் உயர்வு தரும், உறவுகள் தான் கூடவரும், நண்பர்கள் உடனிருப்பார்கள், வாழ்க்கை உன்னுடையது, இறைவன் ஆசீர்வதிப்பார்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் 19.03.2025 இன்று நடைபெறும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு தந்த ஊரவன் அயலவன் நண்பன் உண்மையானவனுக்கு வாழ்த்துக்கள்.




