பிரதேச சபை தேர்தல் 2025…..!

பிரதேச சபை தேர்தல் 2025…..!

வாக்குகள் முகநூல் ஊடாக மட்டுமே வண்டி வண்டியாக கொட்ட போகிறது என முகநூல் பிரச்சாரங்களில் அதிரடி வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரதேச சபை தேர்தலில் சொந்த வட்டாரங்களில் போட்டியிடுபவர்களிற்கு அந்தந்த வட்டாரங்களில் தேவையேற்படுபவர்களையே கண்டு கொள்ளாதவர்கள் ஊரையும் மண்ணையும் மக்களையும் நேசிக்கிறார்களாம்…!

எனது வட்டாரம் 3, வலந்தலை. இந்த வட்டாரத்தின் மூத்த குடிமகன் திரு.புண்ணியசிங்கம் அவர்கள் எந்த முகநூலிலும் இல்லை, முகநூல் பிரச்சாரங்களையோ அல்லது தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது என்றோ இவர் அறிவாரா..! இவருக்கான வாக்குசீட்டு வழங்கப்பட்டதா என்றோ வட்டாரம் 3, வலந்தலையில் வேட்பாளராக உள்ள எவராவது சிந்தித்தீர்களா..?

திரு. புண்ணியசிங்கம் அவர்களும் இலங்கை நாட்டின் குடிமகன், காரைநகர் பிரதேசத்தில் பிறந்தது முதல் இன்று வரை தனது 88வது வயது வரை வாழ்ந்து வருகிறார். உங்களிற்கு தேவையான ஒரு வோட்டு இவரிடமும் உள்ளது. இவருடைய வோட்டு உங்களிற்கு தேவையில்லாயாயின் நீங்கள் ஊரிற்காக, மக்களிற்காக பணிசெய்ய பதவிக்கு வரவதற்கு விரும்பவில்லை என்பதே உண்மை.

திரு.புண்ணியசிங்கம் அவர்கள் வருகின்ற பிரதேச சபை தேர்தலில் 06.05.2025 அன்று தனது வாக்கினை செலுத்த வேண்டும், இவர் யாருக்காக தனது வாக்கினை செலுத்துகிறாரோ அந்த கட்சியே மக்களின் மனதை வென்ற கட்சியாகும்.

ஊருக்குள்ள, உங்க வட்டாரத்தில இவரைப்போல நாலு பேர்கள் இருப்பார்கள். அவரிற்காக அவரது தேவைகளின்காக வேட்பாளர்களான உங்களால் எதுவுமே செய்ய முடியாது, அதனால் அவர்களது வோட்டுகளைப்பற்றியும் உங்களிற்கு கவலை இல்லை. ஆனால் நீங்கள் பிரதேச சபை தேர்தலில் ஊர் மக்களிற்கும் உங்கட வட்டாரத்திற்கும் நல்லது செய்ய போகிறீர்கள்..!

முகநூலில் நீங்க போடுகிற ‘forwarded’ message களில் இருந்தும், “உங்கட சட்டியில என்ன வேகிறது என்பதை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் அடுப்பில என்ன கருகுகிறது” என்று கவலைப்படுகிறீர்களாக்கும் என்று விளங்கிக்கொண்டு வண்டி வண்டியா உங்களிற்கு வாக்கு செலுத்த வேண்டுமாக்கும்….!

உங்கட வட்டாரத்தில உதவியற்ற ஒருவர் தினமும் உங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறார், உனது பொக்கற்றுக்குள் இருந்து ஒரு நேர சாப்பாடு குறைந்த பட்சம் ஒரு தேநீர், அதையும் விட “அண்ணை எப்பிடி இருக்கீங்க..” என நலம் விசாரிக்க கூட முடியாத நிலையிலா நீங்கள் உங்க வட்டாரத்தில வாழ்ந்தீர்கள்..!

தேர்தல் என்ன தேர்தல்… மனிதாபிமானம் கூட இன்றியா வாழ்ந்தீர்கள்…? நீங்கள் எல்லாம் பிரதேச சபை உறுப்பினராகி எதனை சாதிக்க போவதாக நினைக்கிறீர்கள்..! எந்த கட்சிக்கு வக்காலத்து வாங்குவதற்காக உங்கள் நண்பனை, உங்கள் உறவினரை, உங்கள் ஊரவனை எதிர்த்து இல்லாததும் பொல்லாததையும் சொல்லி…. வெற்றி பெற்று விடுவீர்களா…!

திரு.புண்ணியசிங்கம் தனது வாக்கினை செலுத்த வேண்டும், அவருடைய மனதினை எவர் வெல்கிறாரோ அவரே எங்கள் வட்டாரமாகிய வலந்தலை 3 இன் HERO.

திரு. புண்ணியசிங்கம் அவர்கள் 06.05.2025 அன்று முதலில் தனது வாக்கினை செலுத்த வேண்டும், அவர் யாருக்காக தனது வாக்கினை செலுத்துகிறாரோ அவரே எங்கள் வட்டாரத்தின் சேவையாளர்.

கட்சிகளிற்காக தன்னையும் தனது ஊரையும் அடமானம் வைப்பவன் ஒருபோதும் நல்ல அரசியல்வாதியாக முடியாது, மண்ணையும் மக்களையும் நேசிப்பவன் மட்டுமே சிறந்த அரசியல்வாதி.

More From Author

யாழில் இருந்து ஒளிபரப்பாகும் DAN TV இல் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்பாளர்களிற்கான விவாதங்களின் அடிப்படையில் காரைநகர் பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை, யாழ் மாநகர சபை என்பனவற்றில் ‘மான்’ பாயும் என புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்தியிருந்தன.

நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் காரைநகர் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளாக எவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உறுதியோடும் தெரிவித்துள்ளார் யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான திரு.வி. மணிவண்ணன் அவர்கள்.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.