பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன் நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் நேரடி வீடியோ காட்சிகள் மற்றும் திருவிழா காட்சிகள் முகநூல் வாயிலாக அடியவர்களினால் எடுத்து வரப்படவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நாள் கொடியேற்ற திருவிழா காட்சிகள் சில இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.












