நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Awareness

தோல்விகளை முன்கூட்டியே தீர்மானித்த தமிழரசும், சைக்கிளும் காரைநகரில் வன்முறையில் இறங்கியுள்ளன..!

தோல்விகளை முன்கூட்டியே தீர்மானித்த தமிழரசும், சைக்கிளும் காரைநகரில் வன்முறையில் இறங்கியுள்ளன..!

பிரதேச சபை தேர்தல் 06.05.2025 செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள நிலையில் காரைநகரில் வட்டாரம் 1, தங்கோடையில் “மான்” சின்னத்தில் முதன்மைவேட்பாளராக போட்டியிடும் முன்னாள் தவிசாளர் திரு. கணேசபிள்ளை அவர்கள் 05.05.2025 இரவு 10.45 மணியளவில் ஆலடி யாழ்ற்ரன் கல்லூரியடியில் இருவரால் மிகமோசமான நிலையில் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார்வண்டியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அறியப்படுவதாவது ஆயிலி குழந்தை கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவரும் போதையில் இருந்துள்ளதாகவும், கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு பயமுறுத்தி வந்ததாகவும் யாழ்ற்றன் கல்லூரியை அண்மித்த போது தமது மோட்டார் சைக்கிளை குறுக்காக விட்டனர் எனவும் நிலைதடுமாறி விழுந்த திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களை அவரது தலைக்கவசத்தை பறித்து தலைக்கவசத்தால் தலையில் தாக்கியதுடன் அவரை பிடித்து இழுத்து கழுத்தில் போட்டிருந்த 3 பவுண் தங்க சங்கிலியை இழுத்து எடுத்துள்ளதுடன் பின்னால் மற்றொரு மோட்டார் வண்டி வருவதை கண்டு ஓடிவிட்டார்கள் எனவும் தலையில் பலத்த காயம் அடைந்துள்ள திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் களபூமி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

தன்னை தாக்கியவர்களில் ஒருவர் இப்பகுதியில் நாளை நடைபெறும் பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் போட்டுயிடும் முதன்மை வேட்பாளர் ஆனைமுகன் எனவும் மற்றையவர் அவருடைய நண்பர் எனவும் முழுமையாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை தேர்தல் நாளை காலை விடிந்ததும் 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் தமது கட்சிகளின் தோல்விகளை ஏற்கனவே அறிந்து கொண்ட நிலையில் வன்முறையூடாவும், சமூகவலைத்தளமூடாகவும் தமது இயலாமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்களாக சொல்லிக்கொள்ளும் தங்கோடை தமிழரசு கட்சி வேட்பாளரும், வலந்தலை வட்டார சைக்கிள் கட்சி முதன்மை வேட்பாளரும்.

இவர்கள் போன்றவர்களால் தான் தமிழர் கட்சிகள் தமிழர் பிரதேசங்களிலும் படுதோல்விகளை சந்தித்து வருகின்றது என்பதனை இவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். 2009 க்கு முந்தைய அரசியலை வைத்து இன்னமும் பிழைப்பு நடாத்துவதும், மக்களை மடையர்களாக்கி வன்முறை கலாசாரத்தை கையிலும் எடுத்துள்ளார்கள். இந்த தனிப்பட இருவரது அரசியல் மூலமாக இவர்களது கட்சிகளிற்கே அவமானமாகும், இவர்களிற்கு அல்ல…. காரணம் இவர்கள் ஏற்கனவே காரைநகர் மக்களால் எதற்கும் பிரயோசனமற்றவர்கள் என்றரீதியில் அறியப்பட்டவர்கள்.

06.05.2025 காரைநகர் பிரதேசம் உங்கள் வோட்டுக்களால் புதுயுகம் காணவேண்டும். செயற்பாடுகளிற்கு செயல்வடிவம் கொடுக்க “மான்” சின்னத்தில் உங்கள் புள்ளடியை இட்டுக்கொள்வதால் மட்டுமே அது சாத்தியமாகும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605