“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது.
வாழும் போதே கெளரவிப்போம்.
அரச பணியானாலும், தனியார் பணியானாலும் காரை மக்களின் தேவையறிந்து வழமையான பணிகளிற்கு அப்பால் மனித நேயத்துடன் பணியாற்றியவர்களை கெளரவிக்கும் பணியினை ‘ எனது ஊர் காரைநகர்’ , karainews.com நான்காவது தடவையாக கடந்த எட்டு ஆண்டுகளில் முன்னெடுக்கிறது.
2025 ஜனவரி முதல் வாரத்தில் சேவையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. காரை மக்களின் முன்னேற்றம் கருதி தமது பணிகளிற்கு அப்பால் சென்று பணியாற்றியவர்கள், பணியாற்றி வருபவர்களை தெரியப்படுத்துங்கள். முகநூல் உட்பக்கத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், அல்லது theesan@karainews.com என்ற மின்அஞ்சல் முகவரியில் தெரியப்படுத்துங்கள். நேரடியாக தொடர்பு கொண்டு முழுவிபரங்களை பெற்றுக்கொள்கிறேன்.



