வாசிப்பதால் அறிவு பெறுவீர்கள். சிந்தனை ஊற்றுப்பெறும், செயல் வடிவம் பெறும். வாழ்வதிலும் அர்த்தம் தோன்றும்.
“எனது ஊர் காரைநகர்” தீசன் திரவியநாதன் ஊடகவும் மற்றும் வெளிநாடுகள் வாழ் காரை ஊரவர்களின் ஊடாகவும் உதவிகளை பெற்று, சுயநல நோக்கம் இன்றி காரை மக்களிற்காக சேவையாற்றியவர்களையும், கடந்த காலங்களில் காரை மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் தமது பணிகளிற்கு அப்பால் மேலதிகமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றிய 41 நபர்கள் “காரைநகர் சேவையாளர்கள்” என கடந்த நான்கு சேவையாளர் கெளரவம் நிகழவின் மூலம் கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களில் நால்வர் காரை மண்ணை பிறப்பிடமாக கொண்டிருக்கவில்லையெனினும் காரை மண்ணிற்காக பல ஆண்டுகள் விரும்பி வந்து சேவையாற்றியவர்கள். வாழும் போதே வாழ்த்துவோம் என்னும் கருதிற்கு ஏற்ப காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து “எனது ஊர் காரைநகர்” ஆற்றிய பணிகள் வருடந்தோறும் ஏராளம் ஏராளம்.
அது மட்டுமன்றி காரைநகர் வலந்தலை வட்டாரத்தில் மட்டுமன்றி காரைநகர் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிற்கும் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக 2015 இல் தலா 10 இலட்சம் வீதம் ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் தீசன் திரவியநாதன் செலாளராக கடமையாற்றிய காலத்தில் நிரந்தர வைப்பில் இடப்பட்டதுடன், அதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளிலும் அனைத்து பாடசாலைகளும் மேலும் ஒருகோடிக்கு மேற்பட்டளவில் வங்கி வட்டியினை பெற்றுள்ளது.
இது தவிர தீசன் திரவியநாதன் ஒருங்கிணைப்பில் காரை இந்துக்கல்லூரிக்கு 50வது பொன்னகவை தினத்தை முன்னிட்டு 95 இலட்சம் ரூபா செலவில் 29 பழைய மாணவர்கள் இணைந்து இரண்டு மாடிகளைக் கொண்ட இரண்டு வகுப்பறைகளை கட்டி வழங்கினோம்.
எனது ஆரம்ப பாடசாலையான சடையாளி பள்ளிக்கூடத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 18 பழைய மாணவர்கள் இணைந்து 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்களை 2023 இல் நிரந்தர வைப்பில் இட்டு வழங்கினோம்.
கடந்த 20 ஆண்டுகளில் வருடந்தோறும் சிறியதும் பெரியதுமான பணிகள் ஏராளம் “எனது ஊர் காரைநகர்” ஊடாக காரை மண்ணில் செயற்படுத்தப்பட்டன. விளையாட்டுக்கழகங்களிற்கான உதவிகள், தனிப்பட்ட வாழ்வாதார மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு என வருடந்தோறும் காரைநகரின் அனைத்து பாகங்களிலும் உள்ள தகுதியடிப்படையில் கிராம சேவகர்கள், சேவையாளர்கள் என்னை தொடர்பு கொண்டு விடுக்கின்ற வேண்டுகோள்களிற்கு தனிப்பட்ட வகையிலும் முகநூல் ஊடாகவும் உதவிகள் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நீலங்காடு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக திரு.குருபரன் சுப்பிரமணியம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த வருடம் 10 கட்டுமரங்கள் பெற்றுக்கொள்ளவும் கடனடிப்படையில் 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டு, மீண்டும் மீண்டும் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினரால் சுழற்சி முறையில் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர திரு. குருபரன் அவர்களால் இப்பகுதி மக்களின் வாழ்வாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட தகுதியுடைய தனிநபர்களிற்கும் உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கம் முன்வைத்த கட்டுமர மீன்பிடி வலைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுற்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க மேலும் உதவிகள் வழங்கப்படவுள்ளன. எனது முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு பலர் உதவ முன்வந்துள்ளனர்.
2023ம் ஆண்டு எனது தனிப்பட்ட 50வது பிறந்த நாள் கனடாவில் கொண்டாடப்பட்ட போது எனது நண்பர்கள், உறவினர்கள் பணமாக வழங்கிய 23,000 டொலர்கள்(50 இலட்சம்) ரூபாய்கள் காரைநகர் NSB வங்கி கிளையில் நிரந்தர வைப்பில் இடப்பட்டு அடுத்து வரும் 10 ஆண்டுகளிற்கு அதன் வட்டிப்பணம் காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலக ஊக்குவிப்புக்கும் மாணவர் கல்விக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 14.99% வீதம் வட்டியில் அடுத்து வரும் 5 ஆண்டுகளிற்கு மாதாந்தம் வட்டியை பெறும் வகையில் வைப்பில் இடப்பட்டுள்ளதுடன் வங்கி களிவுகள் போக மாதாந்தம் 60,000 ரூபாய்கள் தேவையறிந்து மாணவர்கள் கல்விக்காக வழங்கப்பட்டு வருகிறது.
2005ம் ஆண்டு முதல் காரைநகரிற்கு தொடர்ச்சியான பயணங்கள் மூலம் ‘காரை கிட்ஸ் பார்க்’, ஆரம்பிக்கவும், அப்புத்துரை பள்ளிக்கூடம் மீளதிறக்கவும் நீலிப்பந்தனை கேணி பாதுகாப்பானதாக உயர்த்தி கட்டவும் எனது வட்டாரமாகிய வலந்தலையில் கடந்த 20 ஆண்டுகளில் “எனது ஊர் காரைநகர்” தனித்து செய்த செயற்பாடுகள் எண்ணிலடங்காதவை.
அது மட்டுமன்றி 2012 முதல் எனது அயல் கோயிலும் எனது இளமைக்காலத்தின் நினைவுகள் பலவற்றையும் கொண்டுள்ள நீலிப்பந்தனை அம்மன் கோயிலுக்கு கனடாவில் வதியும் அம்பாள் அடியவர்கள் மூலமாக 12 இலட்சம் ரூபாய்கள் வைப்பிலிட்டு தொடக்கி வைக்கப்பட்ட நித்திய பூசைக்கான நிதியம் தற்போது 30 இலட்சம் ரூபாய்களை கடந்துள்ளதுடன் மேலும் தொடர்ந்து நித்திய பூசைகளிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுளன.
பத்தாயிரம் மைல்களிற்கு அப்பால் வளம் கொழிக்கும் கனடா நாட்டில் வாழ்ந்தாலும் ஊரோடும் உறவோடும் ஊர் மக்களோடும் இணைந்த வகையில் அன்றாடம் தொடர்புகளை பேணி வருகிறேன். 1990 களில் ஊரை விட்டு இடம்பெயர்ந்தாலும் 90’S kids உம், அதன் பின்னரான அடுத்த சந்ததிகளிற்கும் தீசன் திரவியநாதன் என்றுமே நண்பனாகவும், உங்களில் ஒருவனாகவும், ஊரவர்களில் ஒருவனாகவும் உரிமையோடு பழகி வருகிறார்கள்.
ஒன்றுவிட்ட ஒரு வருடம் “எனது ஊர் காரைநகர்” முகதாவில் நடாத்தப்படும் “காரைநகர் சேவையாளர்” கெளரவிப்பு நிகழ்விற்கு பொதுவான அறிவிப்பு மூலம் சேவையாளர்களை ஊர் மக்கள் பரிந்துரைக்கலாம் எனவும் அவர்களுடைய பரிந்துரைகளிற்கமையவே சேவையாளர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதும் கடந்த பத்து ஆண்டுகளில் காரைநகர் மக்கள் நன்கு அறிவார்கள். அந்த வகையில் கடந்த நான்கு சேவையாளர் கெளரவத்தின் போதும் அதிகூடியளவில் 16 பேர்களால் பரிந்துரைக்கப்பட்டவர் காரை இந்துவில் ஆங்கில ஆசிரியராக 27 வருடங்கள் பணியாற்றிய அராலியை சேர்ந்த திரு. K.M. செல்வரத்தினம் மாஸ்ரர் என்பது பலரும் அறியாத ஒன்று.
வட்டாரம் 3, வலந்தலை யில் மக்களின் தேவையறிந்து உரியவர்களை தொடர்பு கொண்டு செயல்பாடே முதன்மையாக கொண்டு செயற்படுத்தி வருபவரும், இப்பகுதி மக்களால் மட்டுமன்றி பொதுப்பணியானால் எப்பிரதேசத்திலும் எந்த கட்சியானாலும் துணிவுடன் இணைந்து செயற்படுபவர் திருமதி.ப.தவமணி அவர்கள்.
“எனது ஊர் காரைநகர்” ஊடாகவும் பல நற்காரியங்களை தனது வட்டார மக்களிற்காக பெற்றுக்கொடுத்தவர், கொரோனா காலத்தில் மக்கள் தேவையறிந்து எள்ளளவும் சுயநலமின்றி தனது வட்டார மக்களிற்காக சேவை புரிந்தவர். கடந்த பிரதேச சபை தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதேச சபையில் துணிவுடனும் செயற்திறனுடனும் செயற்பாட்டை மட்டுமே முன்னிறுத்தி மக்களிற்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுத்தவர். அனைவருடனும் நாகரீகமாக பழகி, நற்பண்புகளிற்கு இலக்கணமானவர்.
வலந்தலை வட்டாரத்தில் மான் சின்னத்தில் திருமதி.ப.தவமணி அவர்களது வெற்றி நூற்றுக்கணக்கான வோட்டு வித்தியாசத்தில் வலந்தலை வட்டார மக்கள் வெற்றிபெற வைத்து, காரைநகர் பிரதேச சபைக்கு வலுவும் திறமையும் கொண்டு தனது செயற்பாடுகளை நிரூபித்தவரான திருமதி.ப.தவமணி அவர்களை வலந்தலை வட்டார மக்களின் குரலாக அனுப்புவார்கள் என்பது உறுதி என்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காரைநகர் வலந்தலை வட்டாரத்தில் இருந்து இவ்வட்டார மக்களின் பிரதிநிதியாக காரைநகர் பிரதேச சபையை “மான்” சின்னத்தின் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்த இப்பகுதி இடம்பெயர்ந்து வாழும் காரைநகர் மக்கள் சார்பாக முன்கூட்டிய வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வார்த்தைகளை நம்பாதீர்கள். செயற்பாடுகளை கண்டு கொள்ளுங்கள். மேலே என்னால் என்னைப்பற்றி சொன்னவைகளை கூட நம்பாதீர்கள். சொல்லப்பட்டவை உண்மைதானா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதனால் எனது செயற்பாடும், சொல்லும், செயலும், எழுத்தும் எனது சுயநலத்திற்கானது அல்ல. உங்களிற்கானவை. எனது தீர்க்கதரிசனம் என்றும் உண்மையானது.






