மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!

மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!

நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசைகளை கிரமமாக வழிப்படுத்தும் வகையில் மாதாந்த பூசைகளை தங்கள் உபயமாக செய்வதற்கு March 31 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுங்கள்.

நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்வதாலும் அவர்கள் ஒவ்வருவருடனும் தனிப்பட்டளவில் தொடர்புகளை மேற்கொண்டு அறியத்தருவதில் பலவித சிரமங்கள் இருப்பதாலும் இவ்வறிவித்தலை தனிப்பட்ட வேண்டுகோளாக ஏற்று தங்களது உபயத்தினை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர் நிர்வாக அமைப்பினர்.

இவ்வறிவித்தலை முகநூல் தொடர்பு இல்லாத உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அம்பாள் அடியவர்களிற்கு அறியப்படுத்தி நித்திய பூசைகளை கிரமமாக நிறைவேற்ற

ஆதீனகர்த்தாக்களினால் பணிக்கப்பட்ட நிர்வாகத்தின் சார்பாக திரு. பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன்

சித்திரை மாதம் முதல் மாதாந்த பூசைகள் பதிவு செய்யப்பட்ட அடியவர்கள் சார்பாக நடைபெறவுள்ளதுடன், மாதாந்த பூசைகள் நெறிமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவுள்ளதுடன் 2026ம் ஆண்டு குடமுழுக்கு செய்வதற்குரிய திருநாள் குறிக்கப்படவுள்ளது எனவும் அறியப்படுத்துகிறார்கள் ஆதீனகர்த்தாக்களால் பணிக்கப்பட்ட நிர்வாகத்தினர்.

இந்த அறிவித்தலானது தனிப்பட்டவகையில் எனது முகநூலில் வெளியிடப்படவில்லை எனவும் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்கள் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு தமது முகநூல்கள் ஊடாகவும் இவ்வறிவித்தலினை அனைத்து அம்பாள் அடியவர்களிற்கும் தெரியப்படுத்தி அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யவும் வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

“யார் குத்தினாலும் அரிசியாகட்டும்” என்னும் வகையில் அனைவரது ஒத்துழைப்புடன் இப்பணியை நிர்வாகத்தினர் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவோம். நன்றி உங்கள் புரிந்துணர்விற்கு.

நித்தியபூசைக்கான மாதாந்த உபயத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: +94 (77) 469 0289 – சிவறைஞ்சன்(றைஞ்சன்) பாலகிருஸ்ணன்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள்.

வாழ்க வளமுடன்..! இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும் ஊரும் போற்ற பல்லாண்டு வாழ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

Leave a Reply