நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Awareness

மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!

மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!

நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசைகளை கிரமமாக வழிப்படுத்தும் வகையில் மாதாந்த பூசைகளை தங்கள் உபயமாக செய்வதற்கு March 31 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுங்கள்.

நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்வதாலும் அவர்கள் ஒவ்வருவருடனும் தனிப்பட்டளவில் தொடர்புகளை மேற்கொண்டு அறியத்தருவதில் பலவித சிரமங்கள் இருப்பதாலும் இவ்வறிவித்தலை தனிப்பட்ட வேண்டுகோளாக ஏற்று தங்களது உபயத்தினை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர் நிர்வாக அமைப்பினர்.

இவ்வறிவித்தலை முகநூல் தொடர்பு இல்லாத உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அம்பாள் அடியவர்களிற்கு அறியப்படுத்தி நித்திய பூசைகளை கிரமமாக நிறைவேற்ற

ஆதீனகர்த்தாக்களினால் பணிக்கப்பட்ட நிர்வாகத்தின் சார்பாக திரு. பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன்

சித்திரை மாதம் முதல் மாதாந்த பூசைகள் பதிவு செய்யப்பட்ட அடியவர்கள் சார்பாக நடைபெறவுள்ளதுடன், மாதாந்த பூசைகள் நெறிமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவுள்ளதுடன் 2026ம் ஆண்டு குடமுழுக்கு செய்வதற்குரிய திருநாள் குறிக்கப்படவுள்ளது எனவும் அறியப்படுத்துகிறார்கள் ஆதீனகர்த்தாக்களால் பணிக்கப்பட்ட நிர்வாகத்தினர்.

இந்த அறிவித்தலானது தனிப்பட்டவகையில் எனது முகநூலில் வெளியிடப்படவில்லை எனவும் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்கள் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு தமது முகநூல்கள் ஊடாகவும் இவ்வறிவித்தலினை அனைத்து அம்பாள் அடியவர்களிற்கும் தெரியப்படுத்தி அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யவும் வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

“யார் குத்தினாலும் அரிசியாகட்டும்” என்னும் வகையில் அனைவரது ஒத்துழைப்புடன் இப்பணியை நிர்வாகத்தினர் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவோம். நன்றி உங்கள் புரிந்துணர்விற்கு.

நித்தியபூசைக்கான மாதாந்த உபயத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: +94 (77) 469 0289 – சிவறைஞ்சன்(றைஞ்சன்) பாலகிருஸ்ணன்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605