சக்தி இலவசக்கல்வி நிறுவனத்தின் பலகோடி செலவில் காரைநகர் பாடசாலைகள், பொது நிறுவனங்கள், கல்வி மேம்பாட்டு திட்டங்கள், கோவிட் கால நிவாரணங்கள் வரிசையில் காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு மற்றும் வைத்திய சாலைக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பணியும் இணைந்துள்ளது.









இதன் மூலம் முதற்கட்டமாக கோவிட் பாதுகாப்பு கருதி வழங்கப்படும் வைத்திய சிகிச்சைகளிற்கான பாதுகாப்பு கூடுகள் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் கடந்த வாரம் முதல் ‘சக்தி’யுடன் இணைந்து கலாநிதி விளையாட்டுக்கழக இளைஞர்கள் சிரமதான பணிகளில் ஈடுபட்டு வைத்தியசாலை வளாகத்தினை மீண்டும் துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைநகர் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கோவிட் சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முழுமையாக பெற்று வழங்கவம் சக்தி இலவசக்கல்வி நிறுவனத்தின் ஊடாக இலண்டன் வாழ் காரை கொடையாளி திரு.நா.இந்திரன் அவர்கள் முன்வந்துள்ளார்.



