எங்கள் ஊர் பாடசாலை அதிபரை, எங்கள் ஊர் சைவ சமயத்தின் அடையாளமாக திகழ்ந்த ஒருவரை, ஈழத்து சிதம்பரத்திற்கு மாதந்தோறும் வரும் பிரதோசத்திற்கு மூன்று மைல் தூரம் நடந்து அபிஷேகத்திற்கு பால் கொடுத்து வந்த சிவனடியாரை, எனக்கு தெரிந்தவரை அவர் நடந்தால் ஒரு எறும்புகூட சாகாது, எவ்வுயிருக்கும் பாதகமில்லாது தன் வாழ் நாளை களித்து வந்த ஒருவரை
கனடாவில் இருந்து ஒருவர் தனது முகநூலில் மிகமோசமாக வசைபாடி வருகிறார்.
அதுவும் அந்த புண்ணியவானின் மகளை திருமணம் முடித்து, வாழ்வாங்கு வாழ வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்த கனடா நாட்டில் இருந்து, தனது சொந்த சகோதரத்திற்காக 30,000 டொலர்கள் கடனாக கொடுத்ததை தனது மாமனாரும் அவரது மைத்துனர்களும் மீண்டும் பெற்றுத்தர வேண்டும் எனவும், தனது சொந்த சகோதரத்திற்கு கொடுத்த 30,000 டொலர்களிற்கு எந்த வகையிலும் பாத்திரமாகாத எங்கள் ஊர் அதிபரை, எங்கள் ஊர் சைவத்தின் அடையாளமாக திகழ்ந்த எங்கள் குருவை ஒருவன் தனது முகநூலில் வசைபாடிக்கொண்டிருக்கிறான்.
அதனை அந்த குருவிடம் கல்வி கற்ற எங்கள் ஊர் மாணவர்கள், எங்கள் ஊர் சைவ அடியவர்கள், எங்கள் ஊரின் அந்த குறிப்பிட்ட குறிச்சியின் குறிப்பிட்ட அயலவர்கள், எங்கள் குருவின் உறவினர்கள், இன்னமும் அந்த கேடுகெட்டவனின் முகநூலில் நண்பர்களாக இருந்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த கேடுகெட்டவனிற்கு அது சொந்த பிரச்சனையாக இருக்கலாம், அதுவே அவனது அறிவாகவும், தனது சொந்த சகோதரத்திற்கு கொடுத்த 30,000 டொலர்கள் அவனால் கனடாவில் இனிவரும் காலங்களிலும் உழைக்க முடியாது போனதால் ஏற்பட்டுள்ள மனவிரக்தி காரணமாக கூட இருக்கலாம்…. ஆனால்…. ஆனால்… 340 பேர்கள் அவனது முகநூலில் நண்பர்களாக இருந்து கொண்டு அவனது செய்திகளை உங்கள் முகநூல்கள் ஊடாகவும் நீங்கள் பரப்பி வருகிறீர்களே… நீங்கள் இதனை தெரிந்து தான் செய்கிறீர்களா…!
உங்களிற்கு மனச்சாட்சி இல்லையா அல்லது அறிவு இல்லையா அல்லது எங்கள் ஊர் அதிபரை, எங்கள் குருவை, எங்கள் ஊரின் சைவத்தின் அடையாளமாக திகழ்ந்து இன்று மரணத்தின் பின்னரும் அவருடைய உன்னதமான ஆசிரியப்பணியை எங்கள் ஊரின் சைவப்பணியை விளங்கிக்கொள்ள முடியாதளவில் இடம்பெயர்ந்த நாடுகளிலும் உங்கள் வக்கிரகங்களிற்கு வடிகால் தேடிக்கொண்டிருக்கிறீர்களா…!
உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்… நீங்கள் ஏன் அந்த கேடு கெட்டவனின் முநூலில் இன்னும் நண்பர்களாக உள்ளீர்கள்.
நீங்கள் அவனை விட கெட்டவனாகவே கருதப்படுவீர்கள். ஊரிற்காகவும், குறிச்சிகளிற்காகவும் கோஷ்டி போட்டு அபிவிருத்தியிலும் புனரமைப்பிலும் ஈடுபடும் என் அருமை நண்பர்களே, எனக்கு தெரிந்தவரை கடவுளுக்கு அடுத்தபடியாக காரைநகர் மக்கள் போற்றத்தக்க எங்கள் ஊரின் முன்னாள் அதிபரும், அவர் குடும்பமும் தனியொருவனால் அவனது சொந்த சகோதரனிற்கு அவனது குடும்ப நலனிற்காக கொடுக்கப்பட்ட கடனிற்காக வசைபாடுவதை நீங்கள் தட்டிக்கேட்க திராணியற்று இருந்தாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் அந்த கேடுகெட்ட ஒருவனிற்கு அவனது முநூலில் friend ஆக இருந்து உடந்தையாக உள்ளீர்கள்.
உங்கள் மனச்சாட்சியிடம் கொஞ்சம் உரையாடுங்கள். நீங்கள் கூத்துப்பார்க்கவும், உங்கள் இயலாமைகளை காட்டிக்கொள்ளாமல் இருக்கவும் 340 பேர்களில் ஒருவராக அவனது முகநூலில் நட்பர்களாக ஒளிந்து கொண்டுள்ளீர்கள்.
இடம்பெயர்ந்த நாட்டில், அரசியல், பொருளாதார, நாகரீகம் முன்னேறிய நாடுகளில் இருந்து கொண்டு எங்கள் எல்லோரிற்கும் தெரிந்த, அறிந்த, பழகிய, படித்த, எங்கள் ஊர் குருவை நிந்திப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை, அதற்கு உடந்தையாக உள்ள 340 பேர்களில் ஒருவராக உள்ள நீங்கள் எந்த கோயிலுக்கு போனாலும் உங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள முடியாது. அது மட்டுமன்றி இலங்கையில் அநுர மட்டுமல்ல அவனது அப்பனே வந்தாலும் அநியாயங்களை ஒழிக்கவும் முடியாது, தமிழனுக்கு விடிவும் கிடையாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
மனக்கிலேசங்களால் தனது முகநூலில் நல்லார் ஒருவரை வசைபாடும் அவனின் முகநூல் நட்பில் இருந்து unfriend செய்யுங்கள், முடிந்தால் Block பண்ணுங்கள், அதற்கும் மேல் சென்று reportபண்ணுங்கள்.
நான் இவை எல்லாவற்றையும் செய்த பின்னரும் எனது நண்பர்கள் ஊடாக அவர்களது முகநூல் ஊடாகவும், நண்பர்களது நண்பர்கள் ஊடாகவும் திரும்ப திரும்ப அந்த கேடுகெட்டவனின் மசேஞ் எனக்கும் உங்கள் ஊடாக வந்து கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் அவனோடு அவனது முகநூல் நண்பர்களாக இருக்கும் 340 எனது ஊரவர்கள் எனது முகநூலில் இருந்து unfriend செய்யப்பட்டு, block செய்யப்படவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கு நான் சென்றுள்ளேன். அல்லது அந்த 340 பேர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் தயவு செய்து எனது முகநூலில் இருந்து என்னை unfriend செய்து கொள்ளுங்கள்.
31.12.2024 இந்த வருடத்தின் இறுதி நாள் மட்டுமல்ல, அவனோடு நண்பர்களாக அவனது முகநூலில் உள்ள நண்பர்கள் எனது முகநூலில் இருந்து unfriend செய்யப்படுவதோடு, என்னால் எனது முகநூலில் இருந்து block செய்யப்படுவார்கள் என்பதனையும் எனது மனச்சாட்சிக்கு அமையவும், எமது ஊரின் சைவப்பாரம்பரியத்தை எங்கள் சந்ததிக்கும் கொண்டுவந்த சேர்த்த எங்கள் குருவின் ஆணையாகவும் அன்போடு சொல்லிக்கொள்கிறேன்.
முகநூலில் unfriend செய்வது எப்படி, block செய்வது எப்படி என்று தெரியாமல் உள்ளவராக நீங்கள் இருந்தால் என்னை தெடர்பு கொள்ளுங்கள். ஒரே ஒரு நிமிடத்தில் அதனையும் நீங்கள் அறிந்து கெள்ளுங்கள். என்னை நீங்கள் unfriend செய்வதாக இருந்தாலும் அதனை தான் உங்களிற்கு சொல்லித்தருவேன். நன்றி.






