திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!
திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!
காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ் நாட்டிலே பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் வளர்சியிலே அதீத அக்கறை காட்டியவரும் அவ்அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினராக, பொருளாளராக பணியாற்றியவருமான திரு.க.மயில்வாகனம்(மயில்) மற்றும் நீலாம்பிகை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வன் ஆதிகேஷன் அவர்களிற்கும் பாரிஸ் பிரபல கலைஞர் திரு.குணபாலன் மற்றும் ரஞ்சிதவதனி தம்பதிகளின் செல்வப்புதல்வி அதிசயா ஆகியோரின் திருமண நிகழ்வு 12.06.2026 கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மணமக்களிற்கு பிரான்ஸ் வாழ் காரை மக்கள் சார்பாகவும், காரை மக்கள் சார்பாகவும் ‘எனது ஊர் காரைநகர்’ சார்பாகவும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, எல்லாம் வல்ல திக்கரை முருகன் மணமக்கள் வாழ்வில் பதினாறு செல்வங்களையும் வளங்கி அருள்வழங்க பிரார்த்தித்திக்கொள்வோமாக

Leave a Reply
You must be logged in to post a comment.