இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள்
வெளியாகிவிட்டன. மருதபுரம் கலைத்தென்றல் இளைஞர் மன்றம் சார்பாக போட்டியிட்ட கதிரவேலு சயந்தன் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்
போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
வருமாறு:
தேவராசா சதானந்தன் – 154
கணபதிப்பிள்ளை நிமலதாசன் – 152
அரியரட்ணம் கிருபாகரன் – 125
சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தேர்தல்
முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் காரைநகர் வலந்தலை சந்திமுதல் மேற்கு றோட் வரையுமான இடங்கள் தொடர் வெடிச்சத்தங்களால் பல மணிநேரமாக அதிர்ந்தன. கொண்டாட்டங்கள் இரவிரவாக களைகட்டியிருந்தன.மேட்டுக்குடி மக்களின் ஒற்றுமையின்மையால் மூன்றாக
பிரிந்து மூவரும் தோற்றுப்போன நிலையில்
ஒற்றுமையையுடன் தனியொருவர் களமிறங்கி
வெற்றியை தனதாக்கி கொண்டுள்ளார் கதிரவேலு
சயந்தன்.
மகிந்த அரசின் புதிய திட்டங்களின் கீழ் இளைஞர்களுக்கான பாராளுமன்றத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்பாராளுமன்றத்திற்கு ஒவ்வொரு பிரதேச சபையில் இருந்து ஒரு இளைஞர் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியின் முன்
பிரமாணம் செய்யப்பட்டு இளைஞர்களுக்கான
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலிருந்து 15 இளைஞர்கள் நாளை தெரிவாகவுள்ளார்கள்.











14 தொடக்கம் 29 வயது வரையினான இளைஞர்கள் இ;தில்
போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதியானவர்களாகின்றனர்.
காரைநகரில் நான்கு போட்டியாளர்களாக அரியரட்ணம்
கிருபாகரன்(கருங்காலி), கணபதிப்பிள்ளை
நிமலதாசன்(நீலிப்பந்தனை), தேவராசா சதானந்தன்(புதுறோட்),
மற்றும் ஊரியில் ஒருவருமாக நால்வர் போட்டியிடுகின்றனர்.
காரைநகரில் வாக்களிக்க 1177 இளைஞர்கள்
தகுதியானவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.



