நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Awareness

இலங்கையின் அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள பிரச்சனைக்கு தீர்வாக இன்று சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெறும் மக்கள் புரட்சியில் யாழ் மாவட்ட மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள பிரச்சனைக்கு தீர்வாக இன்று சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெறும் மக்கள் புரட்சியில் யாழ் மாவட்ட மக்கள் கலந்து கொள்ள வேண்டும். கையெழுத்து வைத்துவிட்டு ஏதோ இரண்டொரு மணித்தியாலங்கள் அரச வைத்தியசாலைகளில் கடமைக்காக பணி புரியும் வைத்தியர்கள் பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் தமது கடமை உணர்ச்சியை காட்டும் வைத்தியர்களை வெளிக்கொண்டு வந்த Dr.அர்சுனா இராமநாதன் நியாயமான வழியில் தனது கருத்துக்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

சாதாரணமாக ஒரு அரச உத்தியோகத்தர் தனது பணி நேரத்தின் போது தனது தனிப்பட்ட அவசர தேவைக்காக பொதுவெளியில் தென்பட்டால் அதற்காக முறைப்பாடுகளை பொறாமையின் காரணமாக சம்மந்தப்பட்ட அரச துறைக்கு அறிவித்து தனது பொறாமைக்கு மருந்து தடவிக் கொள்கிற இந்த காலத்தில் உயிர் காக்கும் வைத்தியதுறையில் கூடுதலான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் நேரம் தவறி பணிக்கு வருவதும், தமது பணி நேரம் முடிவதற்குள் தினமும் தமது சொந்த clinic க்குகளிற்கு செல்வதும், அரச பணி பணி நேரத்தின் போதே சொந்த clinic இல் மேலதிக பணத்திற்காக பணி புரிந்த வைத்தியர்களை துணிவுடன் இனம்காட்டிய சாவகச்சேரி வைத்திய அதிகாரி Dr.அர்ச்சுனா இராமநாதன் அவர்களிற்கு சார்பாக குரல் கொடுங்கள். ஒரு நாள் வைத்திய தேவைக்காக திண்ணவேலிக்கு போய் ஒரு இலட்சம் ரூபாய்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இனி ஒருபோதும் யாழ் மாவட்ட மக்களிற்கு ஏற்படாது.

யாழ் வைத்தியசாலையில் எங்கள் ஊர் பரோபகாரி மட்டுமே கோடிக்கணக்கில் வருடந்தோறும் வைத்திய உபகரணங்கள் சொந்த செலவில் பெற்றுக்கொடுத்தும் இன்றும் காசு ஆஸ்பத்திரிகளிற்கே செல்ல வேண்டிய நிலமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இலங்கையில் மட்டும் தான் பல்கலைக்கழக படிப்பு எந்த துறையானாலும் இலவசமாக உள்ள நிலையில் வைத்தியதுறையில் படித்து தேர்ச்சி பெற்ற பெரும் விகிதாசாரத்தினர் படிப்பு முடிந்ததும் வெளிநாடுகளிலும், சொந்தமாகவும் காசிற்காக வைத்தியதுறையினை பயன்படுத்தினாலும், Dr.அர்ச்சுனா இராமநாதன் போன்ற ஒரு சிலரால் மட்டுமே இன்றும் அநீதிகளிற்கு எதிராக போராட முடிகிறது. இதுதான் புதிய வகை போராட்டம். இதற்காக ஆதரவு வளங்குங்கள். உங்களிற்கு தேவையான போது அரச வைத்தியசாலைகள் அப்போது தான் தயாராக இருக்கும்.

DR.அர்ச்சுனா இராமநாதன் அவர்களின் முகநூல் மூலமாக அவருடைய பல பதிவுகளை பார்த்துள்ளேன். அவருடைய முகத்திலும் மனதிலும் தெரிகின்ற உண்மையும் மக்களிற்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற துணிச்சலும் முற்றிலும் உண்மையானது. அதனை மக்கள் சக்தியோடு நிரூபியுங்கள். யாழ் மாவட்ட மக்கள் ஒவ்வொருவராலும் இதனை நிறைவேற்ற முடியும்.

செய்யுங்கள். இது உங்களிற்கான போராட்டம்.

https://m.facebook.com/story.php?story_fbid=1271014310535772&id=100028816460014&mibextid=w8EBqM

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேள்விக்குறி – தன்வினை தன்னைச் சுடும்

‘தன்வினை தன்னைச் சுடும்’ கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.முத்து பொன்னம்பலம் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்டளவில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605