‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!
‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!
காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்தவரும் சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான திரு. கனகரட்ணம் ஈஸ்வரபாதம்(ஈசன்) அவர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது மாணவனுக்கான இரண்டாவது ஆண்டாக பல்கலைக்கழக கற்கைக்கான உதவிகளை வளங்கி வருகின்றார்.
2025ம் ஆண்டு வரை ஏற்கனவே காரைநகரை சேர்ந்த மாணவன் ஒருவருக்காக தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் கல்விக்கான உதவிகளை வழங்கி நிறைவு பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவன் ஒருவருக்காக மாதாந்தம் 10,000 ரூபா இரண்டாவது ஆண்டாக வளங்கி வருகின்றார்.
இரண்டாவது ஆண்டுக்கான பல்கலைக்கழக கற்கை உதவிக்கான ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் ரூபாய்களை மாணவனது நேரடியான வங்கிக்கணக்கிற்கு இந்த வாரம் அனுப்பி வைத்துள்ளார் என்பதும், அதனூடாக மாதாந்தம் குறிப்பிட்ட மாணவன் 10,000 ரூபா மட்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கி ஊடாக அவருடைய வங்கி கணக்கிலேயே standing order போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவலுக்காக ‘எனது ஊர் காரைநகர்’ ஊடான கல்விக்கான உதவிகள் மூலமாக யாழ்ற்ரன் கல்லூரி மாணவி ஒருவருக்கான உதவி சிங்கப்பூரை சேர்ந்த காரை அன்பர் ஊடாக இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டு வருவதும், காரை இந்துவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்று கல்வியில் சிறந்து விளங்கும் பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவன் ஒருவருக்கான கற்றலுக்கான உதவியை ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக சேர்த்த பணத்தில் முதலாவது ஆண்டிலும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இலண்டனில் வதியும் கலாதிதி ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் மூலமாகவும் நேரடியாக காரை இந்து பழைய மாணவர் சங்க வங்கி கணக்கிற்கு வருடந்தோறும் உரிய தொகை வைப்பில் இடப்படுவதன் ஊடாக காரை இந்து பழைய மாணவர் சங்கம் மாணவனிற்கான கற்றலுக்கான உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமன்றி ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் ஊடாக 2023ம் ஆண்டு 50வது பொன்னகவை பிறந்த நாளை முன்னிட்டு நிரந்தர வைப்பில் இடப்பட்ட 50 இலட்சம் ரூபாய்கள் மூலமாக கிடைக்கப்பெறும் மாதாந்த வட்டிப்பணம் 63,000 ரூபாய்கள் மூலமாக முற்றாக காரைநகர் கல்விப்பணிக்காக standing order மூலமாக வழங்கப்பட்டு வருவதும்,
சிவகெளரி முன்பள்ளி பெரியமணல் – 10,000 ரூபா
அம்பாள் முன்பள்ளி புதுறோட் – 10,000 ரூபா
மருதம் படிப்பகம் மருதபுரம் – 10,000 ரூபா
சடையாளி பள்ளிக்கூடம் – 5,000 ரூபா
உட்பட மேலும் கல்விக்கான தனிப்பட்ட உதவி, தர்மத்திற்கான உதவியென மொத்தம் 55,000 ரூபாய்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியது.
கோயில்களில் சுவாமிகள் இருக்கிறதோ இல்லையோ என்ற நினைப்பில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிற்கு மத்தியில் கல்விக்கான உதவியை கேட்டால் வழங்குவற்கு ‘எனது ஊர் காரைநகர்’ ஏதோ ஒரு வகையில் உதவுவதற்கு தயாராக இருக்கிறது என்று நம்பிக்கையுடன் தொடர்பு கொள்பவர்களை பரிசீலித்து உதவி வழங்க ‘எனது ஊர் காரைநகர்’ பலருக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கி வருகிறது.
நம்பினால் கடவுள், அல்லது கல்.
– எனது ஊர் காரைநகர்.






Leave a Reply
You must be logged in to post a comment.