செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.
பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.
கனடாவிலே எந்த கோயில்களிற்கு சென்றாலும் தேர்த்திருவிழா என்றால் செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடியை காணலாம். பலரும் அதையும் கடந்து செல்வார்கள் ஆனால் அவருடைய பணி என்னவென்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
அடுத்த தடவை கோயில்களில் இவருடைய சாவடியை கண்டால் குறைந்த பட்சம் நன்றியாவது சொல்லிக்கடவுங்கள்.
எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக கடவுளால் படைக்கப்படவில்லை. இவரது படைப்பின் நோக்கம் பலரது உயிர்களைக்காப்பது. அதனை உணர்ந்து கொண்டு செவ்வனே நிறைவேற்றிவரும் செந்தில் அண்ணை…..
உங்கள் பின்னால் மக்கள் வருவார்கள், மனிதம் வாழ வைப்பார்கள்

Leave a Reply
You must be logged in to post a comment.