நாள் : Saturday, September 5, 2026
--:--:--
👁️
Community service

எனது ஊர் காரைநகர் ஊடாக கல்விக்கான நிதியுதவி |2021

காரைநகரை சேர்ந்த மேலும் இரண்டு குடும்பங்களிற்கு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் கல்விக்கான உதவியாக 40,000 ரூபா வழங்கப்பட்டது. காரைநகர் கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கும் காரைநகரை சேர்ந்த முன்னாள் போராளி குடும்பம் ஒன்று கிளிநொச்சியில் புனர்வாழ்வழிக்கப்பட்டு உடல் ஊனத்துடன் வாழ்ந்து வரும் குடும்ப தலைவரைக்கொண்ட குடும்பத்திற்கும் அவர்களின் பிள்ளைகளின் கல்வியினை அடிப்படையாக கொண்டு தலா 20,000 ரூபா வழங்கப்பட்டது. இதற்கான நிதியினை காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி பரமானந்தம் தவமணி அவர்கள் நேரடியாக குடும்பத்தினரிடம் கையளித்தாரர். இதற்கான நிதியுதவியினை கனடாவில் வதியும் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள் தனது பேரப்பிள்ளையின் பிறந்தநாள் கருதிய நற்செயலாக வழங்கியிருந்தார். மேற்படி இரண்டு குடும்பங்களில் கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பத்திற்கு வீட்டுத்திட்டத்தினை முன்னெடுத்து செல்லவும் கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாகவும் உதவிகள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் வாழும் காரைநகரை சேர்ந்த தாய் தந்தை இருவரும் முன்னாள் போராளிகளாக இனம் காணப்பட்ட குடும்பத்தை சேர்ந்த, போரினால் ஒரு காலினை இழந்த குடும்பத்தலைவனை கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாணவி 2019ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று விஞ்ஞான பீடத்தில் தனது உயர்கல்வியை கற்று வருகின்றார்.

இக்குடும்பத்திற்கு வீட்டு திட்டத்தின் ஊடாக அரசினால் சிறிய வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் ‘எனது ஊர் காரைநகரை’ தொடர்பு கொண்டு சில உதவிகள் வழங்கப்பட்டது. கல்வியை ஆதாரமாக கொண்டு தொடர்ந்து இம்மாணவியின் கற்றலுக்காக தொடர்ந்து உதவ முன்வருபவர்கள் என்னை தொடர்பு கொண்டால் அவர்களது முழுவிபரம் தொடர்புகள் ஏற்படுத்தி தரப்படும். ஆவர்களது நிலமையினை நன்கு விளங்கிக்கொள்வதோடு அவர்களிற்கான உதவிகளை வழங்க முடியும்.

(கனடாவில் இருந்து திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள் வழங்கிய நிதியினை பயனாளிகளிற்கு வழங்கியதுடன் அவர்களிடம் இருந்து நேரடியாக வீடியோ பதிவின் ஊடாக நன்றி தெரிவித்த பதிவும் வழங்கப்பட்டன.)

நிதியினை காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி பரமானந்தம் தவமணி அவர்கள் நேரடியாக குடும்பத்தினரிடம் கையளித்தாரர்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605