‘எனது ஊர் காரைநகர்’ karainews.com இந்த ஆண்டில் மற்றுமோர் கல்விப்பணி.!
03.07.2024 இன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் தரம் 7 கல்வி பயிலும் மாணவியும், மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் பாடசாலைக்கும் மண்ணிற்கும் பெருமை தேடித்தந்த மாதடையை சேர்ந்த மாணவிக்கு தீசன் திரவியநாதன் தம்பதிகளின் 50வது பிறந்த நாள் நிரந்தர வைப்பான 50 இலட்சம் ரூபாய்களில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தில் இருந்து அடுத்து வரும் மூன்று ஆண்டுகளிற்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்கும் வகையில் இன்று காரைநகர் NSB வங்கியூடாக standing order வழங்கப்பட்டது. இதனை கேட்டுக்கொண்ட திரு.குருபரன் சுப்பிரமணியம் மற்றும் இந்த செயற்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் காரைநகர் பிரதேச செயலக செயலர் ஆகியோர் கலந்து கொள்ள இன்று 03.07.2024 புதன்கிழமை காரைநகர் பிரதேச செயலகத்தில் மாணவியிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த June 16 அன்று எனது முகநூலில் தெரிவிக்கப்பட்டதற்கு அமைய இன்றைய தினம் 03.07.2024 காரைநகர் மாதடையை சேர்ந்த யாழ்ற்ரன் கல்லூரி மாணவிக்கான அடுத்து வரும் மூன்று ஆண்டுகளிற்கான கல்வி ஊக்குவிப்பு நிதி இன்று சட்டப்படி வழங்கி வைக்கப்பட்டது.
ஊரிற்கும் மண்ணிற்கும் மக்களிற்கும் உடனடி பயன் தரும் வகையில் ‘எனது ஊர் காரைநகர்’ இந்த ஆண்டு 2024 இல் செயற்படுத்தும் ஐந்தாவது திட்டமாகவும் ஊர் பெயரால் இயங்கும் காரை அமைப்புக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் செய்வதை சொல்வதும், சொல்வதை செய்வதிலும் ‘ எனது ஊர் காரைநகர்’ கடந்த 15 ஆண்டுகளில் 100% கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி வருவது சிந்தனை உள்ளவர்கள் திரும்பி பார்த்து அறிந்து கொள்ளப்பட வேண்டியது.
கடந்த வாரம் காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக செயற்படுத்தும் வகையில் காரைநகர் ஊரியை சேர்ந்த குடும்பத்திற்கான உதவிக்காக கோரப்பட்ட நிதியுதவிக்கு கோரப்பட்ட நிதி உதவியிலும் நான்கு மடங்கு அதிகமாக எம்மால் வழங்கப்டவுள்ள போதிலும் அதனை செயற்படுத்த காரைநகர் அபிவிருத்தி சபை தற்போது தயக்கம் காட்டி வருவதால் இன்னும் சில நாட்கள் அவகாசத்தில் உரியவர்களிற்கான பயனை வேறு பொது அமைப்பின் ஊடாக செயற்படுத்தி ஏழு நாள் அவகாசத்தில் வழங்கி வைப்போம் என்பதை காரைநகர் அபிவிருத்தி சபைக்கும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’
நீங்கள் ஊரிற்குள் என்னதான் விதண்டாவாதங்களிற்கு உட்பட்டாலும் ஊரிற்குள் காலம் கருதி நடக்க வேண்டிய செயற்பாடுகளை நாடுகளை கடந்து வாழும் ‘ எனது ஊர் காரைநகர்’ உரிய நேரத்தில் உரிய பணிகளை உரிய முறையில் உரியவர்கள் ஊடாக நிறைவேற்றியே ஆகும்.


– எனது ஊர் காரைநகர்.
தீசன் திரவியநாதன்



