அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும் ஊரவர்கள் எங்களால் முடிந்ததையும் நிறைவேற்றுவோம். June 08, 2026

June 08, 2026. அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும் ஊரவர்கள் எங்களால் முடிந்ததையும் நிறைவேற்றுவோம்.

காரைநகர் மருதபுரம் பெரியடைப்பு பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று 2026.01.12 அன்று காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.(கடிதம் இணைக்கப்பட்டுள்ளது).

மேற்படி கடிதம் தொடர்பாக முன்னாள் காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் மூலமாக குடும்பத்தினரின் முழுமையான வாழ்க்கை நிலவரம் உறுதிப்படுத்தப்பட்டு, மேற்படி குடும்பத்தினரின் வீடமைப்பு திட்டத்திற்கு உதவி வழங்க காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ முன்வந்திருந்தது.

குடும்பத்தினரின் 10 இலட்சம் ரூபாய்கள் மூலமும் காரைநகர் அபிவிருத்தி சபை மூலமாக ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய 4 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்கள் ஊடாகவும்(ரசீதுகள் இணைக்கப்பட்டுள்ளன) வீடமைப்பு குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கடந்த வாரம் இலண்டன் வாழ் அன்பு உறவு திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்களது முழுமையான கூரை வேலைக்கான அனுசரணையாக 7 இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி கோப்புச வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மேற்படி குடும்பமானது சிறந்த முறையில் திட்டமிட்டு செலவுகளை குறைத்து துல்லிதமான நிதி மேலாண்மையுடன் தமது வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் 2026 ஜனவரி மாதம் ‘எனது ஊர் காரைநகர்’ மூலமாக 9 இலட்சம் ரூபாய்கள் வழங்கினால் தமது வீட்டை அமைத்துக்கொள்ளலாம் என கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களது முயற்சிக்கு முடிந்ததை செய்யவும் ஊக்குவிக்கும் வகையிலும் வீட்டை கட்டுவதற்கு ஆரம்பியுங்கள் உதவிகள் வந்து சேரும் என கடவுளை நம்பி வாக்குறுதி வழங்கினேன்.

இதுவரை ஐந்து இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு இன்னமும் நான்கு இலட்சம் ரூபாய்களை வழங்கினால் கூடிய விரைவில் வீட்டில் குடியேற முடியும் எனவும், மீண்டும் ஊரவர்கள் மூலம் தங்களது நிலமைகளை படங்களுடன் தெரியப்படுத்தி இவ்வுதவியை பெற்று தருமாறு கேட்டுள்ளார்கள். செய்வீர்களா காரை உறவுகளே. இன்னமும் நான்கு இலட்சம் ரூபாய்கள், காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக வழங்க முன்வருவீர்களா..!

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும் எம்மால் முடிந்த ஒரு உதவி. உங்களது பெயரால் வழங்குங்கள். காரைநகர் மருதபுரம் பெரியடைப்பு வீடமைப்பு உதவிக்கென காரைநகர் அபிவிருத்தி சபைக்கு நேரடியாக அனுப்பி வையுங்கள். உங்களது சிறு தொகையானாலும் அக்குடும்பத்தினருக்கு உங்களது பெயரால் செல்வதையும் அதற்குரிய உத்தரவாதத்தையும் ‘எனது ஊர் காரைநகர்’ உறுதிப்படுத்திக்கொள்கிறது.

இதுவரை காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கியவர்கள் விபரம்: 08.06.2026.

1.தீசன் திரவியநாதன் – 50,000 ரூபா

2.பிறேமளகுமாரி பிரபாகரன் – 1 இலட்சம் ரூபா

2. மகாதேவன் பாலசுப்பிரமணியம் – 50,000 ரூபா

3. விக்கினேஸ்வரன் தர்மலிங்கம் – 50,000 ரூபா

4. மிதுரன் குருபரன் – 1 இலட்சம் ரூபா

5. உமைபாகன் கனகேந்திரம் – 50,000 ரூபா

6. Dr.விஜயரத்தினம் சார்பாக – 50,000 ரூபா

7. அரியரட்ணம் கிருபாகரன் – 5,000 ரூபா

8. செல்வராசா வேலாயுதபிள்ளை – 2,000 ரூபா

9.நிமலன் கணபதிப்பிள்ளை – 5,000 ரூபா

10.

11.

12.

13.

14.

15.

More From Author

ஊடகவியலாளர்களிற்கான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்கின்ற அநுர அரசிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்..!

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.