நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Damaged House

ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில்.

செய்வன திருந்த செய்வோம்.

ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில்.

June 24ம் திகதி முதல் கடந்த மூன்று மாதங்களாக கைகுழந்தை உட்பட மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம், வாழ்விடமான குடிசையையும் இழந்து வெட்டவெளியில் குடும்பம் நடாத்தி வருகிறது.

இந்த முகநூல் ஊடாக இப்பகுதி J/44 கிராமசேவகர் திரு.மயூரன் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம் எம்மால் 215,000(இரண்டு இலட்சத்து பதினைந்தாயிரம்) ரூபாய்கள் சேர்த்து வழங்கப்பட்டது. அதிலும் காரைநகர் அபிவிருத்தி சபையிடம் வழங்கப்பட்ட 77,400 ரூபாய்கள் இன்னமும் உரியவர்களிடம் கையளிக்க முடியாத நிலையில் காரை அபிவிருத்தி சபை.

இந்த நிலையில் 15.09.2024 நேற்றைய தினம் இப்பகுதி கிராம சேவகரை தொடர்பு கொண்டதுடன் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சென்று பார்வையிடப்பட்டது. கேட்பதற்கு நாதியற்ற நிலையிலும் சொல்வதற்கு திராணியற்ற நிலையிலும் மேற்படி குடும்பம் இன்னமும் வெட்ட வெளியில் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் செய்வார்கள், இவர்கள் செய்வார்கள் என நாமும் இருந்துவிட முடியாது. காரைநகரில் பொது அமைப்புக்கள் பல அந்த நிலையில் தான் பயனித்துக்கொண்டிருக்கின்றன. நாம் எடுத்த முயற்சியை நாமே நிறைவு செய்ய வேண்டும்.

எம்மால் இதுவரை வழங்கிய நிதியான 138,000 ரூபாய்கள் மூலம் கீழ்வரும் நிலை வரை தமது வீட்டிற்கான வேலைகளை செய்து முடித்துள்ளனர்.

மேலும் தினமும் காரைநகர் அபிவிருத்தி சபைக்கு பலமுறை நடந்தும் எம்மால் அதே குடும்பத்திற்கென வழங்கப்பட்ட 77,400 ரூபாய்களை பொருளாளர் வழங்க மறுத்து வருகிறார்.

J/44 கிராம சேவகரின் வேண்டுதலின் பிரகாரம் திரு.மயூரன் அவர்களே காரைநகர் அபிவிருத்தி சபை பொருளாளருடன் தொடர்பு கொண்டு காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் பணத்தை அனுப்ப அனுமதி பெறப்பட்ட நிலையில், தற்போது பொருளாளர் பலவித காரணங்களை சொல்லி அவரிடம் இருந்து கடிதம் வேண்டி வா, இவரிடம் இருந்து கடிதம் வேண்டிவா, இதுவரை செய்த வேலைகளிற்கான ரசீது கொண்டு வா, எங்கே பொருட்கள் வேண்டினீர்கள், அதற்காக கோட்டேசன் எடுத்தீர்களா என்று வலியையற்ற குடும்பத்தை வதையாய் வதைத்து வருகிறார். இதுதான் இன்றைய காரைநகர் அபிவிருத்தி சபையின் நிலமை.

இவர்களால் ஒரோ ஒரு முறை நேரடியாக சென்று பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தண்ணீரை விற்று பிழைப்பு நடாத்துவதையே குறிக்கோளாக கொண்டு இயங்கும் வலுவற்ற காரைநகர் அபிவிருத்தி சபையை நம்பி இனி எந்த பயனும் ஏற்படபோவதில்லை.

மேற்படி குடும்பத்தை தொடர்பு கொண்ட போது ‘ஏன் அண்ணா இவர்களிடம் பணத்தை அனுப்பினீர்கள்.. வேணும் எண்டே அந்த பணத்தை எம்மிடம் தரமனமில்லாது அசிங்கம் அசிங்கமாக பேசி தினமும் தம்மை அலைக்களிக்கிறார் பொருளாளர் என கூறினார்கள்’. இதன் மூலம் காரைநகர் அபிவிருத்தி சபையினருக்கு பகிரங்கமாக தெரிவித்துக்கொள்வது யாதெனில்.. அவர்கள் உங்களிடம் இனி எம்மால் வழங்கப்பட்ட பணத்தை கேட்டு வரமாட்டார்கள்.

முடிந்தால் ஊர் பணி என்ற பெயரில் தண்ணீர் விற்பதை வியாபாரமாக கொண்டு இயங்கும் நீங்கள் அவர்களை தேடிச்சென்று அவர்களிற்கென வழங்கப்பட்ட பணத்தை மரியாதை கொடுத்து இதுவரை காலமும் அலைய விட்டமைக்காக மன்னிப்பு கோரி அந்த பணத்தை அவர்களிடம் கையளியுங்கள்.

மேற்படி குடும்பத்தின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அவர்கள் வாழும் வகையில் வீட்டை ‘எனது ஊர் காரைநகர்’ அமைத்துக்கொடுக்க இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி குடும்பத்தின் குடும்ப தலைவர் மேசன் வேலைக்கு சென்று வருவதாலும் அத்தொழிலில் பரீட்சையம் உள்ளதாலும் உடனடியாக 500 அரிகற்களும் 10 பை சீமெந்தும் வேண்டிக்கொடுத்தால் அரைசுவர் எழுப்பவும், மேற்கொண்டு பாதுகாப்பானதாக்க ஒன்றரை இலட்சம் ரூபாய்களும் எம்மால் ஒரு வாரத்தினுள் வழங்கப்படவுள்ளது.

(அரிகற்கள்- 500*130) = 65,000 ரூபா

(சீமெந்து – (1900*10) = 19,000 ரூபா

நிலை, கதவு, பாதுகாப்பு அமைத்தல்) – 150,000(ஒன்றரை இலட்சம் ரூபாய்கள்).

மேற்படி தேவைகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்’ உடன் இணைந்து கொள்ளுங்கள். பெயருக்கும், விலாசத்திற்கும் கடமைக்காக பதவிகளில் குந்தி இருப்பவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ள நிலையில் செய்வனவற்றை திருத்தமாக செய்யும் ‘எனது ஊர் காரைநகர்’ என்றும் எப்போதும்.

மனச்சாட்சியும், மனிதாபிமானமற்ற வகையிலும் நடந்து கொள்ளும் காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் தயவு செய்து ‘நீங்கள் ஏன் உந்த பதவிகளில் குந்தி இருக்கிறீர்கள்..?’ என்று ஒரு கணம் சிந்தித்து முடிவு எடுங்கள்.

உங்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை, நாமாக கண்டு கொண்டு பணம் அனுப்பி அனைத்து உதவிகளையும் வழங்கினாலும் நாதியற்றவர்களிடம் மதிப்பளிக்க தெரியாதளவில் நடந்து கொள்ளும் நீங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையில் தண்ணி வித்து எதை சாதிக்க போகிறீர்கள்..?

இன்று காரைநகரில் தண்ணீரை வியாபாரமாக செய்ய ஐந்து நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கும் உங்களிற்கும் என்ன வித்தியாசம்…? கொஞ்சம் சிந்தியுங்கள். பொதுப்பணியை உணர்ந்து செய்பவர்களிற்கு வழியை விட்டு செல்ல வேண்டிய காலம் உங்களிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கீழே ஊரி குடும்பத்தின் கடந்த மூன்று மாத கால நிலமை. 15.08.2024 நேற்றையதினம் சனிக்கிழமை படமாக்கப்பட்டது.

நாதியற்றவர்களிற்கு குரலாய் நாம் இருப்போம். கடவுளை நாம் எங்களிடம் வரவழைப்போம். நன்றி.

– எனது ஊர் காரைநகர்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605