மறுஅறிவித்தலும் மன்னிப்பும்..!
எனது முகநூலில் June 11 அன்று ‘காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன’ என்ற செய்தியில் வெளியிடப்பட்ட படத்தில் வெளியான நபருக்கும் மாடுகள் திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், ஊர்காவற்றுறை பொலிசாரால் வழங்கப்பட்ட படத்தில் உள்ள நபர் மாட்டு வண்டியை ஓட்டிச்செல்ல பணிக்கப்பட்டபோது படமாக்கப்பட்டதாகவும், பசு மாட்டு திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏற்கனவே பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதும், எனது முகநூலில் வெளியான படத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச்செல்பவர் சந்தேக நபர்கள் பிடிக்கப்பட்டதன் பின்னர் பொலிசாரினால் வண்டியை காவல் நிலையத்திற்கு எடுத்துச்செல்ல பணிக்கப்பட்டவர் என்பதையும், எனது முகநூல் வாயிலாக வெளியான செய்திகளில் தவறு ஏதும் அற்ற நிலையில் வெளியான புகைப்படத்தின் ஊடாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்காக புகைப்படத்தில் உள்ள நபரிடமும் சம்பந்தப்பட்டவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.
காரைநகர் சிவன்கோயிலடியில் இருந்து பட்டப்பகலில் பசுமாடு ஒன்று களவாடி செல்லப்பட்டதும், அதனை கையும் களவுமாக பிடித்ததுவும் களவோடு சம்மந்தப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதுவும் மேலும் விசாரணைகளில் பல களவுகளின் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
‘எல்லாம் அவன் செயல்’
தீசன் திரவியநாதன்
25.07.2024

Leave a Reply
You must be logged in to post a comment.