நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Karainagar

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் இரவு திருவிழா |19.03.2021

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயிலில் 19.03.2021 முதல் நடைபெற்றுவரும் சிவன் பங்குனி மகோற்சவ இரவு திருவிழா காட்சிகள்….!

ஈழத்து சிதம்பரம் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக 03.03.2021 அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியினால் தற்காலிக தீர்பாக ஈழத்து சிதம்பரத்தின் நிர்வாகத்தில் ஆதீனகர்த்தாக்களாக திரு.முருகேசு சுந்தரலிங்கம், திரு.ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஆகிய இருவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அதற்கான சில நிபந்தனைகளை விதித்ததுடன் அவ்வாறு செயற்பட தவறும் பட்சத்தில் ஈழத்து சிதம்பரம் நிர்வாகம் அரச பெறுனர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பங்குனி மகோற்சவ காலத்தில் நிதி செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறவேண்டும் எனவும் நீதிபதியினால் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திரு.முருகேசு சுந்தரலிங்கம், திரு ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஆகியோர் சம்மதித்திருந்ததுடன் அதனையே செயற்படுத்தவும் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் மரண தொடக்கு காரணமாக இருவரும் தற்போது நடைபெற்று வரும் பங்குனி மகோற்சவத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தற்காலிக தீர்ப்பின் முழுவடிவம் இந்த இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்ற போதிலும் அதனை காரைநகர் மக்களிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் பணத்திற்காக காரைநகர் மக்களின் ஆன்மீகம் கொச்சைப்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் அதனை இந்த இணையத்தளம் எடுத்து வரவில்லை.

இந்த நிலையில் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்களிற்கும் அப்பால் இறைவன் தீர்ப்பாக காரைநகர் மக்களின் ஆன்மீகம் இறைவனால் காப்பாற்றப்பட்டுள்ளது.

காரைநகர் மக்கள் இதனை புரிந்து கொண்டால் ஈழத்து சிதம்பரம் காரைநகர் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக ஆன்மீக தலமாக எதிர்காலத்திலும் திகழும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605