நாள் : Saturday, September 12, 2026
--:--:--
👁️
Karainagar

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் இரவு திருவிழா |19.03.2021

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயிலில் 19.03.2021 முதல் நடைபெற்றுவரும் சிவன் பங்குனி மகோற்சவ இரவு திருவிழா காட்சிகள்….!

ஈழத்து சிதம்பரம் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக 03.03.2021 அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியினால் தற்காலிக தீர்பாக ஈழத்து சிதம்பரத்தின் நிர்வாகத்தில் ஆதீனகர்த்தாக்களாக திரு.முருகேசு சுந்தரலிங்கம், திரு.ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஆகிய இருவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அதற்கான சில நிபந்தனைகளை விதித்ததுடன் அவ்வாறு செயற்பட தவறும் பட்சத்தில் ஈழத்து சிதம்பரம் நிர்வாகம் அரச பெறுனர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பங்குனி மகோற்சவ காலத்தில் நிதி செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறவேண்டும் எனவும் நீதிபதியினால் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திரு.முருகேசு சுந்தரலிங்கம், திரு ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஆகியோர் சம்மதித்திருந்ததுடன் அதனையே செயற்படுத்தவும் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் மரண தொடக்கு காரணமாக இருவரும் தற்போது நடைபெற்று வரும் பங்குனி மகோற்சவத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தற்காலிக தீர்ப்பின் முழுவடிவம் இந்த இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்ற போதிலும் அதனை காரைநகர் மக்களிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் பணத்திற்காக காரைநகர் மக்களின் ஆன்மீகம் கொச்சைப்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் அதனை இந்த இணையத்தளம் எடுத்து வரவில்லை.

இந்த நிலையில் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்களிற்கும் அப்பால் இறைவன் தீர்ப்பாக காரைநகர் மக்களின் ஆன்மீகம் இறைவனால் காப்பாற்றப்பட்டுள்ளது.

காரைநகர் மக்கள் இதனை புரிந்து கொண்டால் ஈழத்து சிதம்பரம் காரைநகர் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக ஆன்மீக தலமாக எதிர்காலத்திலும் திகழும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை...

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605