நாள் : Monday, September 14, 2026
--:--:--
👁️
Fund Request

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

எனது பங்களிப்பை வளகுவதாக பொதுவில் வெளிப்பட எழுதியதும் அதற்காகத்தான். 100 டொலர் கொடுப்பதை விலாசம் காட்டவல்ல, உங்களாலும் முடியும் ஆனால்… முடியாது.

கோயிலில் கொண்டுபோய் உண்டியலில் போட்டு உங்கட பிள்ளைக்கு படிப்பு ஏறவேண்டும் என்றும் சோதனையில் pass பண்ணவேண்டும் என்று கும்பிடுகிற ஒருவரும் கடந்த காலங்களில் இன்னொரு பிள்ளை படிக்க வேணும் என்று கேட்டால் ஒரு நூறு ரூபா கொடுக்க மனம் இல்லையா அல்லது நூறு ரூபா கொடுத்தால் உங்களிற்கு மானப்பிரச்சனை என்று நினைக்கிறீர்களா…?

ஊரிலும் இலங்கையிலும் கருணை உள்ளம் படைத்தவர்கள் இல்லையா அல்லது வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா…?

வெளிநாடுகளில் உள்ளவர்கள் கொடுத்தால் சிலருக்கு பிரச்சனையாக உள்ளது, கொடுக்கவில்லையானால் சிலருக்கு பிரச்சனையாக உள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது நாட்டின் பணத்தின் பெறுமதியால் கொடுப்பது பெரிதாக இருப்பதால் ஊரிலோ அல்லது இலங்கையிலோ வசிப்பவர்கள் இலங்கை ரூபா 100 அல்லது ஆயிரம் கொடுப்பதால் தம்மை இழிவாக பார்த்து விடுவார்களோ எனவும் சிந்திக்கலாம் ஆனால் நீங்கள் கொடுக்கும் 500 அல்லது 1000 பணத்தின் பெறுமதி குறைவாக இருக்கலாம் ஆனால் காரைநகர் அபிவிருத்தி சபை செய்யும் இந்த பணிக்கு நீங்கள் கொடுக்கிற ஊக்கம் பெரும் ஒத்துழைப்பாக அமையும்.

உண்டியலில் போடுகிற சில்லறை பணத்தையாவது சின்னாலடியில இருக்கிற காரைநகர் அபிவிருத்தி சபை காரியாலயத்திலை கொடுத்துப்பாருங்கோ. கோயில் உண்டியலில் போடுகிற திருப்தியை விட நூறு மடங்கு புண்ணியமாக போகும்.

நம்பினால் தான் கடவுள். கடவுள் உங்களிடம் நான்கு கைகள், வேலாயுதம், சூலாயுதம், சங்கு, சக்கரத்தோட வந்து கேட்க மாட்டார். இதோ இந்த பிள்ளைக்காக இறங்கி வந்து கேட்பதாக இருக்கலாம்.

கீழே உள்ள காரைநகர் அபிவிருத்தி சபையின் வேண்டுகோளை வாசியுங்கள்.

இதற்கு மேலும் விளங்கவில்லையானால் நீங்கள் கல்லிலை நார் உரிக்கிறவையாக இருக்கலாம். அல்லது புறக்குடத்தில் வார்த்த நீராக இருக்கலாம்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

நீங்க எவடம்…!

நீங்க எவடம்…! நீங்க வடமராட்சியோ அல்லது வலிகாமமோ..! யாழ்ப்பாணத்துக்குள்ளேயே வேறுபாடுகளாம்…! வடக்கா..! கிழக்கா…! தமிழா… சிங்களமா…! அந்த சாதியா…!...

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 13.09.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 13.09.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதன்முறையாக...

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா தொடர்பாக ‘மருதடி இந்து இளைஞர் மன்றம்’ விடுக்கும் அறிவித்தல்.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா தொடர்பாக ‘மருதடி இந்து இளைஞர் மன்றம்’ விடுக்கும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605