ஒப்பிலாமணி பாலசிங்கம் | மறைவு 16.08.2014
ஒப்பிலாமணி பாலசிங்கம்
காரைநகர் ப.நோ.கூ.சங்கம் முன்னாள் கிளை முகாமையாளர் (நீலிப்பந்தனை, இலந்தைச்சாலை காரைநகர்)
காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்
இலந்தைச்சாலை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி பாலசிங்கம் 16.08.2014 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஒப்பிலாமணி – வள்ளியம்மை தம்பதிகளின் மகனும் நாவலக்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதியர்களின் அன்பு மருமகனும் புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் இராமகிருஷ்ணன் (ஆசிரியர்-வியாவில் சைவவித்தியாலயம், காரைநகர்), ஜானகி (பிரான்ஸ்)
இராதாகிருஸ்னன், சித்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவநாதன் (பிரான்ஸ்) இரத்தினலீலா, சற்குணராசா (லண்டன்) ஆகியோரின் மாமனும் கோபிகா,
மயூரதன், தனரூபன், தமிழினி, நவநீதன், யாதவன், கம்சாஜினி, தர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்
திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி, காலஞ் சென்றவர்களான கண்மனி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரனும் கோடிலிங்கத்தின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.08.2014
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்
துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி,பிள்ளைகள்
இலந்தைச்சாலை,
காரைநகர்.

Leave a Reply
You must be logged in to post a comment.