தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள்.
தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள்.
17 ஆண்டுகளிற்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான சந்நிதிகளும் ஆயிரக்கணக்கான விக்கிரகங்களும் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அவற்றிற்கான கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு கும்ப நீர் குடமுழுக்கு செய்யப்பட்ட நிலையில் நாளை வியாழக்கிழமை காலை 17.09.2026 காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரையிலான சுபவேளையில் மகாகோபுர கலசங்களிற்கும் பிரதான கற்பக்கிரகங்களிற்கும் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
பல இலட்சம் பக்தர்கள் இந்தியாவில் இருந்தும் பல நாடுகளில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் இது தொடர்பான காட்சிகளும் விபரங்களும் ஒளிபரப்பப்பட்டு வருவதுடன், காரைநகரில் இருந்து கலந்து கொள்ள சென்ற நண்பர்கள் ஊடாகவும் காட்சிகளை கண்டு களித்த வண்ணமுள்ளேன்.
சாதாரண நாளின் போதே மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றிப்பார்க்க ஓரிரு நாட்கள் போதாது. அந்த வகையில் கும்பாபிஷேகத்தை சனநெரிசல் இன்றி கண்டு களிப்பதற்கு மிகப்பிரமாண்டமான 51 திரைகள் கோயில் வளாகங்களில் காட்சிகளை ஒளிபரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.



Leave a Reply
You must be logged in to post a comment.