நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Australia

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் | மறைவு: 12.03.2015

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம்
மாப்பாணவூரி காரைநகர்
(சிட்னி, அவுஸ்திரேலியா)

மறைவு: 12.03.2015
காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினத்தின் அன்பு மனைவியும், சிவபாதசுந்தரம் (கனடா), அருள்ஞானசுந்தரம், அருந்ததிதேவி, செல்வமணி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜயலட்சுமி, தனேஸ்வரி, ரஞ்சிற்குமார், சிறீகாந்தா, சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரணவன், காயத்திரி, அபிராமி, ராம்பிரகாஸ், கஜன் ஆகியேரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற திருமதி அமராவதி
சிவராமன், நாகரட்ணம்(இலண்டன்), காலஞ்சென்ற அரசரத்தினம், திருமதி இராசலோகினி தம்பிஐயா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக 14.03.2015 சனிக்கிழமை Liberty Funerals, 101 South Street, Granville, NSW 2142 என்ற இடத்தில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 16.03.2015 திங்கள்கிழமை East Chapel, Rookwood சேமக்காலையில் மதியம் 12.15 முதல் 3.00 மணிவரை நடைபெற்று தகனம்
செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொலைபேசி: அவுஸ்திரேலியா – 614 6962 9650

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605