முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.
முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.
11.09.2026 கடந்த சில நாட்களிற்கு முன்னர் தனது 90வது வயதில் தமிழுடன் ஒன்றாக கலந்த பின்னரும் இன்று 14.09.2026 விநாயகர் சதுர்த்தி தினத்தில் அன்னாருடைய பட்டிமன்றம் ‘Sun TV’ இல் வெளியாகியுள்ளது.
இறந்தும் இன்றும் வாழும் புகழிற்கும் முத்தமிழோடு நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ கலாசாரத்தையும் தமிழோடு இணைத்துக்கொண்டவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்பதற்கு இதைவிட என்ன சான்றுகள் இருந்துவிடப்போகின்றது.
14.09.2026 இன்றைய விநாயகர் சதுர்த்தி நன்னாளை முன்னிட்டு ‘Sun TV’ ஒளிபரப்பாக வேண்டிய பட்டிமன்றம் அன்னாரது மறைவிற்கு 11.09.2026 க்கு சில தினங்களிற்கு முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் 21ம் நூற்றாண்டிலும் நிலைதிறுத்தி சென்றுள்ளார்.
14.09.2026 இன்று ‘Sun TV’ ஊடாக வெளியான பட்டிமன்றத்தில் வாதிட்டவர்கள் அனைவரும் மிகவும் சுவாரசீகமாக தற்போதைய தமிழ்நாட்டு அரசியலையும் சிலேடையாக தொட்டுச்சென்றதும் அறிவிற்கும் சிந்தனைக்கும் உட்பட்டளவில் சிந்திக்க வைத்துள்ளதும், இதுவே மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய வகையில் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தனது தமிழ்பணியை ‘பட்டிமண்டப அரசன்’ பேராசிரியர் சாலமன் பாப்பையா விட்டுச்சென்றுள்ளதும் சத்தியமான உண்மையாகும்.

Leave a Reply
You must be logged in to post a comment.