31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள்.
31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபையின் முகநூல் ஊடாக அறிவிக்கப்பட்டு இடம்பெயர்ந்த காரை ஊரவர்களும் உள்ளூர் காரை ஊரவர்களும் ஒரு வார காலத்தினுள் இரண்டு இலட்சத்து அறுபத்தியேழாயிரம் ரூபா செலவிலான மடிக்கணணி ஒன்றை வழங்கியுள்ளார்கள்.
இத்திட்டத்திற்காக காரைநகர் அபிவிருத்தி சபைக்கு நிதியுதவி வளங்கியவர்கள் விபரம்:
1. அருளம்பலம் கனேசலிங்கம்(கொழும்பு) – 51,000 Rs
2. ARV சோமசுந்தரம்(இலண்டன்) – 50,000 Rs
3. மகாதேவன் பாலசுப்பிரமணியம்(கனடா) – 50,000 Rs
4. ஆறுமுகம் செந்தில்நாதன்(சுவிஸ்) – 41,000 Rs
5. தீசன் திரவியநாதன்(கனடா) – 25,000 Rs
6. பேபிராணி யோகேந்திரன்(கனடா) – 25,000 Rs
7. பிரபா ரவிச்சந்திரன்(கனடா) – 25,000 Rs
மொத்தம்: 267,000 ரூபா.
மேலே நிதியுதவி வளங்கியவர்கள் பெருந்தன்மையோடு தமது பெயர்களை குறிப்பிட வேண்டாம் எனவும் ‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது..’ என்பதற்கு இணங்க பெயருக்காகவோ அல்லது பெருமைக்காகவோ கொடுக்கவில்லை என்பதனையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் பொதுப்பணிக்காக தம்மை அர்ப்பணித்து சேவை புரிபவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கு தமது இயலாமை காரணமாகவும் பொறாமைகள் காரணமாகவும் கதைகட்டுபவர்கள் அதிகரித்துள்ள நிலமையில்… குறிப்பிட்ட செயற்பாடுகளிற்காக நிதி உதவி வளங்குபவர்கள் பெயரை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
மேற்படி திட்டத்திற்காக ஏழு நபர்கள் ஊடாக மட்டுமே நிதி உதவி பெறப்பட்டுள்ளது என்பதும் அனைவரும் தெரிந்து கொண்டு… பொறாமை மற்றும் இயலாமைகளை காரணமாக ‘சேர்த்த பணத்தில் குடும்பம் நடாத்துகிறார்கள்..’ என்று சமூக வலைத்தளங்களில் கதை கட்டுபவர்களிற்கும் அந்தந்த சமூக வலைத்தளங்களில் குந்தியிருந்து கூத்துப்பார்ப்பவர்களிற்கும் இதனை தெரிவிக்க வேண்டியதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
அது சரி… ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ செய்த செயற்பாட்டிற்கு எனது முகநூலில் இந்த வியாக்கியானமும் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது ஏன்..? என்ற கேள்வி உங்களிற்கு எழுந்திருக்கும்.
அதற்கான பதில்:
காரைநகர் அபிவிருத்தி சபை மட்டுமே இப்போது மிச்சம் உள்ளது. இடம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த ஐந்துக்கும் மேற்பட்ட காரை அமைப்புக்களில் ஒவ்வொன்றிலும் போட்டி, பெறாமை மற்றும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக ‘கதை கட்டி’ பொதுப்பணியில் இருந்து நீக்குவதும் அவமானப்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டு இயலாமை நோய் கொண்டு சிலர் உருவாகியுள்ளனர்.
அந்த வகையில் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஆயுட்கால அங்கத்தவராகவும், எதிர்காலத்தில் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊரிற்கான தேவை கருதியும், காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாக அங்கத்தவர்களின் பணிகளை தெரியப்படுத்தியும் அவர்களது நம்பிக்கை நாணயத்தை அனைவரும் அறிந்து கொள்ளவும், அத்துடன் என்னாலும் இப்பணிக்காக சிறியளவிலான உதவிகளை வளங்கியுள்ள காரணத்தினாலும் மொத்த தொகையினையும் வளங்கியவர்கள் பெயர் விபரம் என்பவற்றையும் நிர்வாக சபை உறுப்கினர்களை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஆயுட்கால உறுப்பினராக நேரடியாக தொடர்பு கொண்டு மன்றத்தின் நிதி நிலமைகளை என்னால் கேட்டுத்தெரிந்து கொள்வதையோ அதற்கான பதிலை வளங்கும் காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாக சபை உறுப்பினர்களோ காரைநகர் அபிவிருத்தி சபையின் வளர்சியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மட்டுமே.
ஆயுட்கால அங்கத்தவராக காரைநகர் அபிவிருத்தி சபையினை முன்னின்று இயக்குவதும் வெளிப்படையாக செய்திகளை சொல்வதும் எனது பணியாகும். பின்னின்று இயக்குவதோ தொடர்புகள் இன்றி ஊகத்தில் செய்தி சொல்வதோ ‘எனது ஊர் காரைநகர்’ ஒருபோதும் செயவதில்லை.
நன்றி.

Leave a Reply
You must be logged in to post a comment.