நாள் : Saturday, September 19, 2026
--:--:--
👁️
Awareness

அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன்.

அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன்.

அது மட்டுமா அன்றைய தற்காலிக வீதி புனரமைப்பு வேலைகள் நிறைவுற்றதும், நான்கு தார் பரல்களை தவிசாளர் பதுக்கி வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது, நேரடியாக அது தொடர்பாக வினவியபோது தவிசாளரினால் அந்த நான்கு தார்பரல்களும் பிரதேச சபையின் செயலாளர் திரு.கி.வியஜேஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டதும் அது பிரதேச சபைக்கு வளங்கப்பட்டிருந்ததையும் செயலாளர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி இது போன்று பல அவதூறுகளை ஆதாரம் இன்றி ஒரு சில சுயநலமற்ற அரசியல் பிரமுகர்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மை நிலமையினை அறிந்து கொள்ள தகுதியும் திறமையும் இருந்தும் காரணம் கிடைத்தால் ஒருவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி மக்களிடத்தில் அவர்கள் மீதுள்ள நல்லெண்ணத்தை இல்லாமல் செய்வதையே தமது சொந்த நலன்களைக்கொண்டு செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

முன்னாள் தவிசாளர் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் தவிசாளராக இருந்து இலட்சக்கணக்காக பணத்தை கொள்ளையடிக்கவோ அன்றி காரைநகர் மக்களை ஏமாற்றி பிழைக்க வேண்டிய தேவை இல்லை என்பதை நான் அறிவேன்.

கனடாவில் நிரந்தர வதிவுடமை பெற்றுள்ள திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கனடாவிற்கு வருகின்றபோது சொந்தமாக வேலை செய்து வந்துள்ளார், அத்துடன் அவருடைய சொந்த மருமகன் பெற்றோல் நிரப்பு நிலையம் வைத்துள்ளார், ஒரு மாதம் வேலை செய்தால் போது 5 இலட்சம் ரூபாய்கள் சம்காதிக்க முடியும், அத்துடன் திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் கனடா வந்தால் சொந்தமாக கார் ஓட்டுவதற்கும், சொந்தமாக அனைத்து செயற்பாடுகளையும் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் உரிய மொழி திறமையினையும் பொது அறிவினையும் நன்கு கொண்டுள்ளார். கனடாவில் 20 வருடமாக வாழும் ஒருவர் தனது பிள்ளைகள் மீதும் மருமக்கள் மீதும் தங்கியே வாழ்கின்ற நிலையில் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் முற்றிலும் தன்னால் வேலை செய்தும், தனது கடமைகளை தானே நிறைவேற்றவும், எவர்மீதும் தங்கியிருக்க வேண்டிய நிலமையில் இல்லாதவர். இந்த நிலையில் காரைநகரில் தவிசாளராக இருந்த காலத்தில் ஐந்து இலட்சம் பத்து இலட்சம் மோசடி எனவும் அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல்வாதிகள் என்ற கோட்பாட்டை வைத்து மக்களை நம்ப வைக்க முயற்சிப்பது முற்றிலும் திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீதுள்ள பயமும் போட்டியுமே காரணமாகும்.

திரு. கணேசபிள்ளை பாலசரசந்திரன் அவர்களோடு மோதுவதாக இருந்தால் அரசியலில் உங்களால் காரைநகர் மக்களிற்கு திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனை விட உங்களால் என்ன நன்மைகளை பெற்றுக்கொடுத்துவிட முடியும் என்பதை மக்களிற்கு சொல்லுங்கள்.

திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களது பணியினை 1980 களிலும் பின்னர் 2000 ம் ஆண்டுகளிலும் நேரடியாக கண்டு கொணரடவன் நான்.

பஞ்சத்தில் பணத்திற்காகவோ அன்றி புகழிற்காகவோ அரசியலுக்கு வந்தவர் இல்லை அவர் என்பதை விளங்கிக்கொள்வீர்கள். தனது திறமைகளினாலும் தனது நட்புக்களினாலும் தனது நல்லெண்ணத்தினாலும் தனது சொந்த பணத்தின் ஊடாகவும் ஊரவர்கள் பலரிற்கும் காலத்தால் செய்த உதவிகள் பல.

அரசியல்வாதிகள் என்றால் ஊழல் என்பதற்கு அப்பால் ஊர்ப்பணி என்பதையே தனது மூச்சாக கொண்டிருப்பதால் தான் கனடாவில் எப்போது வந்தாலும் சொந்தமாக வேலை, சொந்தமாக அன்பும் ஆதரவும் நிறைந்த பிள்ளைகள், சுயமாக செயற்படும் மொழி அறிவும் பொது அறிவும் ஒருங்கே அமையப்பெற்றும் இன்றும் காரை மண்ணில் மக்களிற்காக மக்களுடன் அதுவும் பொய் பேசி வீழ்த்த நினைக்கிற மக்களுடன் இன்றும் காரை மக்களிற்கு நல்லதை செய்யவே களத்தில் அனுபவத்துடன்…

உங்கள் வோட்டு நேர்மைக்கும் ஊர்ப்பணிகளிற்கானதாகவும் இருக்கட்டும்…

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள்.

தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள். 17 ஆண்டுகளிற்கு...

உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…!

உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…! காரைநகர் நீலிப்பந்தனை கிராம மக்களின் கடந்த...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605